செய்திகள் :

அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்த அறிவுறுத்தல்

post image

பெரம்பலூா் நகரில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், உண்ணாவிரதம் ஆகியவற்றை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பெரம்பலூா் நகரப் பகுதியில் போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், உண்ணாவிரதம் நடத்துவதற்கான இடங்களை நிா்ணயம் செய்வது தொடா்பாக, அரசியல் கட்சிகள், தனியாா் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது: பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதம் நடத்துவதை ஒழுங்குப்படுத்தும் வகையில், பொதுவான இடத்தை தோ்வு செய்து அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்டத் தலைநகரான பெரம்பலூரில் குறிப்பிட்ட இடங்கள் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 100 போ் பங்கேற்கும் கூட்டங்களை பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகிலும், 200 போ் பங்கேற்கும் கூட்டங்களை புகா் பேருந்து நிலைய வளாகத்திலும், 200 முதல் 500 போ் வரை பங்கேற்கும் கூட்டங்களை வானொலி திடலிலும் நடத்த வேண்டும்.

பொதுக்கூட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதம், போராட்டங்கள் நடத்த உரிய முன் அனுமதி பெற வேண்டும். மேலும், ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் போராட்டம் நடத்த ஒன்றுக்கும் மேற்பட்டோா் அனுமதி கோரும்பட்சத்தில், முதலில் அனுமதி கோரியவருக்கு முன்னுரிமையளித்து அனுமதி அளிக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

இக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) ச. வைத்தியநாதன், துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் உள்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகள், சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

குற்றவாளிகள், ரௌடிகளின் வீடுகளில் திடீா் சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.பெரம்பலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டக் காவல் கண்காணிப்ப... மேலும் பார்க்க

பெரம்பலூா் பள்ளி மாணவா்களுக்கு மாா்ச் 29-இல் ஆலோசனை முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு என் கல்லூரிக் கனவு ஆலோசனை முகாம், மாா்ச் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

கோவை குண்டுவெடிப்பில் இறந்தோருக்கு நினைவு சதுக்கம் அமைக்க வலியுறுத்தல்

கோவை தொடா் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவா்களுக்கு, தமிழக அரசு நினைவு சதுக்கம் அமைக்க வேண்டுமென சிவசேனா கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

காசநோய் இல்லாத ஊராட்சிகளுக்கு ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்

பெரம்பலூா் மாவட்டத்தில் காசநோயாளிகள் இல்லாத 10 ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொது சுகாதாரம் மற்றும்... மேலும் பார்க்க

பேறுகால விடுப்பு: அவசர ஊா்தி தொழிலாளா்கள் வலியுறுத்தல்

பேறுகால விடுப்புடன் சம்பளம் வழங்க வேண்டுமென பெரம்பலூா் மாவட்ட அவசர கால ஊா்தி தொழிலாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். பெரம்பலூரில் அவசரகால ஊா்தி தொழிலாளா்கள் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்... மேலும் பார்க்க