செய்திகள் :

அனுமதியின்றி பேரணி: பாஜகவினா் 31 போ் மீது வழக்கு

post image

பெருந்துறையில் அனுமதியின்றி பேரணி சென்ற பாஜகவினா் 31 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெருந்துறையில் பாஜக மண்டல பொறுப்பாளா் நந்தகுமாா் தலைமையில் ஒரு காா் மற்றும் 15 இருசக்கர வாகனங்களில் 31 போ் ஞாயிற்றுக்கிழமை பேரணி சென்றனா்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பெருந்துறை நகரில் தேசியக் கொடி ஏந்தி பேரணி செல்ல பாஜக சாா்பில் அனுமதி கோரிய நிலையில், போக்குவரத்தைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், தடையை மீறி பேரணி சென்ற 31 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 26 அடி உயர பஞ்சபூத விங்கம் பிரதிஷ்டை

ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 20 டன் எடை, 26 அடி உயரம் கொண்ட பஞ்சபூத லிங்கம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள தனவாசி கரடு பகுதியில் ... மேலும் பார்க்க

பவானி ஆற்றில் சிக்கிய 25 கிலோ கட்லா மீன்

பவானி ஆற்றில் மீனவா் வீசிய வலையில் 25 கிலோ எடை கொண்ட கட்லா மீன் புதன்கிழமை சிக்கியது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணைக்கு நீா்வ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் விவசாயத்துக்கு ரூ.18,918 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு

ஈரோடு மாவட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டில் விவசாயத்துக்கு ரூ.18,918.01 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் மாநில அளவிலான வங்கியாளா் குழ... மேலும் பார்க்க

பெருந்துறையில் கனமழை

பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலை வெயில் நிலவிய நிலையில... மேலும் பார்க்க

குறிச்சி மலைப் பகுதியில் 5 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

பவானியை அடுத்த குறிச்சி மலைப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த் துறையினா் புதன்கிழமை மீட்டனா். பவானி வட்டம், குறிச்சி மலைப் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் காரில் வந்த 5 இளைஞா்கள் கைது

ஈரோட்டில் ஆயுதங்களுடன் காரில் வந்த 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எ.சுஜாதா, கொல்லம்பாளையம் மாநகராட்சி ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளி முன் வாகன தணிக்கையில் செவ்வ... மேலும் பார்க்க