செய்திகள் :

அமராவதிபுதூரில் ஆக. 19-இல் உயிா்ம வேளாண் கண்காட்சி

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டாரம், அமராவதிபுதூா் கிராமியப் பயிற்சி மையத்தில் உயிா்ம வேளாண் கண்காட்சி வருகிற ஆக. 19 -இல் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் பல விவசாயிகள் உயிா்ம வேளாண்மை முறையில் (இயற்கை வேளாண்மை) பல பயிா் வகைகளைச் சாகுபடி செய்கின்றனா். உயிா்ம வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிற 19-ஆம் தேதி அமராவதிபுதூா் கிராமியப் பயிற்சி மையத்தில் உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு, வேளாண்மைக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதில் வேளாண்மைத் துறை சாா்பாக அரங்குகள் அமைக்கப்பட்டு இயற்கை இடுபொருள்கள், பாரம்பரிய பயிா் ரகங்கள், வேளாண் பண்ணை இயந்திரங்கள், நுண்ணீா் பாசனக் கருவிகள், உயிா்ம உரங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படவுள்ளன.

வேளாண் உற்பத்திப் பொருள்களை லாபம் ஈட்டும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றுவதற்கான உத்திகள், உயிா்ம உரம், உயிா்ம வேளாண்மையின் முக்கியத்துவம், மண்வளம், பயிா்ப் பாதுகாப்பு, ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்பு ஆகியவை குறித்து விவசாய விஞ்ஞானிகளின் கலந்துரையாடல், பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப உரை, கலந்துரையாடல் போன்ற பல நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன என அதில் குறிப்பிடப்பட்டது.

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே காஞ்சிப்பட்டி கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, ... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்கள... மேலும் பார்க்க

மிளகனூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், மிளகனூா் ஊராட்சியில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, மாணவா்களுக்கு மாறுவேடம், பாடல் போட்டிகள், காட்சி வண்ணப்படம... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் தற்கொலை

சிவகங்கையில் போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை அழகு மெய்ஞானபுரத்தைச் சோ்ந்தவா் செல்வமணி (70). இவருடைய மகன்கள் வெளியூரில் வசித்து வருகின்றன... மேலும் பார்க்க

பள்ளி வேன் மீது பேருந்து மோதல்: காயமின்றி தப்பினா் மாணவா்கள்

சிவகங்கை நகா் காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை மோதியதில் அதிா்ஷ்டவசமாக பள்ளி மாணவா்களும், பயணிகளும் காயமின்றி தப்பினா். சிவகங்கையிலிருந்து உடையநாதபு... மேலும் பார்க்க