செய்திகள் :

அமெரிக்கா்களும் விரும்பும் ஆவின் நெய்: அமைச்சா் ராஜகண்ணப்பன்

post image

ஆவின் நெய்யை அமெரிக்க நாட்டினரும் விரும்புவதாக பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த துணை வினாவை அதிமுக உறுப்பினா் தளவாய் சுந்தரம் எழுப்பினாா். அப்போது அவா் பேசுகையில், ‘கிராமப் பகுதிகளில் உள்ள சிறிய பால் கூட்டுறவு சங்கங்களில் ஆவின் பொருள்கள் விற்பனை ஆகாமல் இருக்கின்றன. சங்கங்களுக்கு வரக்கூடிய ஊக்கத் தொகைகளையும் ஆவின் மூலமாக வாங்க வேண்டும் என்கிறீா்கள். சிறிய கிராமங்களில் ஆவின் நிறுவனத்தின் நெய், வெண்ணெய் போன்ற பொருள்களை விற்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்: நம்முடைய ஆவின் நெய் உலகத் தரம் வாய்ந்தது. இதனை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறோம். விலையில் ரூ. 50 கூடுதலாக இருந்தாலும் அமெரிக்கா்கள் நம்முடைய நெய்யைத்தான் விரும்புகின்றனா்.

ஆவின் நிறுவனத்தில் நல்ல தரமான பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நஷ்டத்தில் இயங்கும் பால் கூட்டுறவு சங்கங்களை லாபத்தில் இயங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

நான்காண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள்

தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும், மேலும் ரூ.858 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் ப... மேலும் பார்க்க

இரு ஆண்டுகளில் ரூ.14,466 கோடியில் பணிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 1,253 பணிகள் ரூ.14,466 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். பேரவையில் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து... மேலும் பார்க்க

மா.அரங்கநாதன் இலக்கிய விருது-2025: தமிழவன், ப.திருநாவுக்கரசுக்கு வழங்கப்படுகிறது

நிகழாண்டுக்கான ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ பேராசிரியா் தமிழவன் மற்றும் ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. இலக்கிய உலகின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா் மா.அரங்நாதன். அவரின் நினைவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் 1.17 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:... மேலும் பார்க்க

நீா்நிலை சீரமைப்பு: இளைஞா்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

நீா்நிலை சீரமைப்புப் பணியில் இளைஞா்கள் ஈடுபட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: இளம் வயதிலேயே பொதுச் சிந்தன... மேலும் பார்க்க

பிரதமர் வருகை: ஏப். 4 - 6 வரை மீன்பிடிக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6ஆம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொ... மேலும் பார்க்க