செய்திகள் :

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பெயர் போர்த் துறையாக மாற்றம்!

post image

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் பெயரைப் போர்த் துறையாக மாற்றும் நிர்வாகக் கோப்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திடவுள்ளார்.

கடந்த மாதமே பாதுகாப்புத் துறையின் பெயரை மாற்றப் போவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசியதாவது:

“முதலாம் உலகப் போரையும் இரண்டாம் உலகப் போரையும் நாங்கள் வென்றுள்ளோம். எங்களின் பாதுகாப்புத் துறையை போர்த் துறை என்றே அழைக்க வேண்டும். பாதுகாப்பு என்பது ஒரு பகுதி மட்டுமே. விரைவில் பெயர் மாற்றப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், பெயர் மாற்றத்துக்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திட உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் முதல்முறையாக ராணுவத்தை உருவாக்கியபோது போர்த் துறை என்ற பெயரையே வைத்தார்.

பின்னர் 1949 ஆம் ஆண்டு அதிபர் ஹாரி ட்ரூமன், முப்படைகளை இணைத்து பாதுகாப்புத் துறை எனப் பெயரிட்டார். அப்போது காங்கிரஸிடம் இருந்து ஒப்புதல் பெற்ற பிறகே பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

President Donald Trump is set to sign an executive order on Friday that will change the name of the US Department of Defense to the Department of War.

இதையும் படிக்க : பெரியார் உலகமயமாகிறார்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்: ரஷிய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு!

‘எண்டெரோமிக்ஸ்' என்ற எம்- ஆர்என்ஏ மருத்துவ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பு மருந்து வெகுவிரைவில் பொது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுந... மேலும் பார்க்க

உக்ரைனில் 800 ட்ரோன்கள் ஏவி ரஷியா தீவிர தாக்குதல்..!

உக்ரைனில் 800-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவி ரஷியா ஞாயிற்றுக்கிழமை(செப். 7) தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனில் ரஷியா ராணுவ படையெடுப்பை தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், அதன்பின் நடத்தப்ப... மேலும் பார்க்க

காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிற்சி!

காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிர்சியில் ஈடுபட்டுள்ளன. இவ்விரு நாடுகளின் சாகர்மாதா நட்புறவுக் கொல்கையின்கீழ், ஐந்தாம் ஆண்டாக இந்த ராணுவப் பயிற்சி நிகழ்ச்சி இன்... மேலும் பார்க்க

ஜப்பான் பிரதமர் ராஜிநாமா!

பிரதமர் மோடி ஜப்பான் சென்று பேச்சுவார்த்தை நடத்திய 10 நாள்களுக்குள் அந்நாட்டின் பிரதமர் ஷிகேரு இஷிபா ராஜிநாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜப்பானுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த மாத... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பாடகி மீது கரடி தாக்குதல்

பாகிஸ்தான் பாடகி குராத்துலைன் பலூச் மீது கரடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பிரபல பாடகியாக அறியப்படுபவர் குராத்துலைன் பலூச். இவர் பல்டிஸ்தானில் உள்ள கிராமங்களுக்குச் சென்று ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது குண்டு வெடிப்பு- ஒருவர் பலி!

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். பாகிஸ்தானின் பஜாவூர் மாவட்டத்தில் உள்ள கௌசர் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண... மேலும் பார்க்க