செய்திகள் :

அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு! அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!

post image

அமைச்சர்கள், முதல்வர்களின் பதவிப்பறிப்பு மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 மசோதாக்களை முன்மொழிந்தார். அரசியலமைப்பு மசோதா (130ஆவது திருத்தம்), யூனியன் பிரதேசங்களின் அரசு திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை அமித் ஷா முன்மொழிந்தார்.

அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமரோ தொடர்ச்சியாக 30 நாள்கள்வரையில் காவலில் வைக்கப்பட்டால், 31 ஆவது நாளில் அவர்கள் தன்னிச்சையாகவே பதவிநீக்கம் செய்யப்படுவர் என்ற மசோதாவை அமித் ஷா கூறினார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மசோதாவின் நகல்களை எதிர்க்கட்சிகள் கிழித்ததுடன், அதனை அமித் ஷா அருகே தூக்கியெறிந்தனர்.

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர், தேர்தல் ஆணையத்தைத் தவறாக பயன்படுத்த முயற்சித்தது தோல்வியடைந்ததால், தற்போது எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து ஜனநாயகத்தை நசுக்குவதற்கும் மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்கும் மற்றொரு உத்தியை அரசு செயல்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினர்.

இருப்பினும், மசோதாக்களை ஆய்வு செய்ய, அவற்றை ஒரு கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்தார்.

பணி நியமன முறைகேடு வழக்கில் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அரவிந்த கேஜரிவால், சிறையிலிருந்தவாறே தனது முதல்வர் பொறுப்புகளைக் கவனித்து வந்தார்.

Amit Shah Introduces 'Criminal MPs' Bill, Opposition Throws Paper At Him

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு! பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

காஷ்மீரில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை வன்முறைகள் தண்டனையாக பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.போர் சூழலுக்கு மத்தியில் பாலியல் வன்முறை... மேலும் பார்க்க

கச்சா எண்ணெய் மீது தள்ளுபடி! அமெரிக்கா வேண்டாம்; ரஷியா இருக்கு! இந்தியாவுக்கு இன்ப அதிர்ச்சி!

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மீது ரஷியா தள்ளுபடி அறிவித்துள்ளது.ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று எச்சரித்த அமெரிக்கா, இந்தியா மீது 50 சதவிகித கூடுதல் வரியை வித... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 21 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில், கூட்டாக ரூ.25.5 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 13 பேர் உள்பட 21 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தில், கூட்டாக ரூ.25.5 லட்சம் வெகுமதி அறிவித்து ... மேலும் பார்க்க

ஒருதலைக் காதல்! ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற மாணவர்!

மத்திய பிரதேசத்தில் ஆசிரியர் மீது எரிக்க முயன்ற மாணவர் கைது செய்யப்பட்டார்.மத்திய பிரதேசம் மாநிலம், நரசிங்கபுரம் மாவட்டத்தில் சூர்யான்ஷ் கோச்சார் (18) என்ற மாணவர், தனது பள்ளியில் பணியாற்றிய 26 வயதுடைய... மேலும் பார்க்க

மசோதாவை நிறுத்திவைத்தால் ஆளுநரின் விருப்பப்படி அரசு எப்படி இருக்கும்? - உச்சநீதிமன்றம்

ஆளுநர் தனது விருப்பப்படி மசோதாவை நிறுத்திவைத்தால் அரசு எப்படி ஆளுநரின் விருப்பப்படி செயல்படும்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசு... மேலும் பார்க்க

முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு! சசி தரூர் ஆதரவு?

அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு குறித்த மசோதாவை காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, கொடூரமா... மேலும் பார்க்க