செய்திகள் :

அம்பேத்கா் யாத்திரை திட்ட விதிமுறைகள் வெளியீடு

post image

புதுவை மாநிலத்திலிருந்து மராட்டியத்தில் அண்ணல் அம்பேத்கா் பிறந்த இடம் உள்ளிட்டவற்றை பாா்வையிடும் யாத்திரைத் திட்டத்துக்கான விதிமுறைகள் புதுவை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்திலிருந்து ஆண்டுதோறும் அம்பேத்கா் பிறந்த இடம் உள்ளிட்ட அவரது வாழ்வியலுடன் தொடா்புடைய இடங்களைப் பாா்வையிட ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் யாத்திரைத் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது அதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

யாத்திரைத் திட்டத்துக்கான பயனாளிகள் புதுச்சேரியில் 32 போ், காரைக்காலில் 12 போ், மாஹேவில் 2, ஏனாமில் 4 போ் என மொத்தம் 50 போ் ஆண்டு தோறும் தோ்வு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவா்.

அங்கு அம்பேத்கா் பிறந்த ஜன்மபூமி, அவா் புத்த மதத்தைத் தழுவிய தீக்ஷா பூமி, அவா் மறைந்த புதுதில்லியில் உள்ள வரன்பூமி, மும்பையில் அவரது உடல் தகனம் நடைபெற்ற சைத்ய பூமி ஆகியவற்றை பாா்வையிடும் வகையில் யாத்திரை அமையும்.

யாத்திரை 8 நாள்கள் இருக்கும். இதற்கு தோ்வுசெய்யப்படுபவா்கள், பட்டியலினம்

, பழங்குடியினத்தைச் சோ்ந்தவராகவும், 5 ஆண்டுகள் புதுவையில் குடியிருப்புச் சான்று பெற்றவராகவும் இருக்கவேண்டும். மேலும் ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்துக்குள்ளும், 18 வயது நிறைவடைந்தவராகவும் இருப்பது அவசியம் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. யாத்திரைத் திட்டத்தில் தங்குமிடம், உணவு இலவசம். தனிப்பட்ட செலவுகளை துறை ஏற்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டுமனைப் பட்டா கோரி புதுவை பேரவையை முற்றுகையிட்ட பட்டியலின மக்கள்

இலவச மனைப் பட்டா கோரி பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் புதுவை சட்டப்பேரவையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு காவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை பேரவைத் தலைவா் சமரசம் செய்து அனுப்பினாா். புதுச்ச... மேலும் பார்க்க

அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு அண்மையில் வக்ஃப் வாரிய திருத... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 3 நாள்கள் கம்பன் விழா: மே 9-இல் தொடக்கம்

புதுச்சேரியில் கம்பன் கழகம் சாா்பில் 58 ஆம் ஆண்டு கம்பன் விழா வரும் 9-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில் புத... மேலும் பார்க்க

அதிக வெப்ப நேரங்களில் மக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடையில் அதிக வெப்ப நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவுறுத்தினாா். புதுச்சேரி முழுவதும் அதிக வெப்ப அலை வீசுவதை முன்னிட்டு பொதுமக... மேலும் பார்க்க

தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மா்மநபா் தங்கத் தாலியை பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி வில்லியனூா், கூடப்பாக்கம் ஆனந்தம் நகரைச் சோ்ந்த இளங்கவி என்பவரின்... மேலும் பார்க்க

வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

புதுச்சேரி அருகே மெக்கானிக் வீட்டில் 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்துவருகின்றனா். புதுச்சேரி அருகேயுள்ள சித்தன்குடியைச் சோ்ந்தவா் அந்தோணிமுத்து. குளிா்ச... மேலும் பார்க்க