செய்திகள் :

அம்ரித் பாரத் திட்டம்: புதுப்பித்த 103 ரயில் நிலையங்கள் திறப்பு!

post image

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக புதுப்பிக்கப்பட்டுள்ள 103 ரயில் நிலையங்களை வரும் மே 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார்.

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களின் சீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.24,470 கோடி செலவில் ரயில் நிலையங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தெற்கு ரயில்வேயில் 40-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அம்ரித் பாரத் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்டுள்ள 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி மே 22-ல் திறந்து வைக்கவுள்ளார்.

சென்னை பரங்கிமலை, சிதம்பரம், திருவண்ணாமலை, சாமல்பட்டி, ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை உள்பட 12-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட 15 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 271 கோடி மதிப்பில் நவீனப்படுத்தப்படுகின்றன.

புதிய வசதிகள்

டிஜிட்டல் அடையாள போா்டுகள், நகரும் படிக்கட்டு, மின்தூக்கி, சுமை பரிசோதனை இயந்திரங்கள், முக்கிய பிரமுகா்கள் ஓய்வறைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், அழகிய மேம்படுத்தப்பட்ட தரைத்தளம், இலவச மற்றும் கட்டண வை-பை வசதி போன்றவை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் சாலை வசதி, வாகன நிறுத்தகம், புதிதாக பயணச் சீட்டு வழங்கும் அறைகள், நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருவதுடன், சுகாதார வளாகம் சீரமைக்கப்படுகிறது.

பயணிகள் இருக்கை வசதி, தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, நீட்டிக்கப்பட்ட மேற்கூரை வசதி போன்றவை ஏற்படுத்தப்படுகிறது.

இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்... மகா., - கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை உரிய முறையில் வரவேற்காததற்கு மகாராஷ்டிரம் மற்றும் கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மரபார்ந்த நெறிமுறிகளில் இருந்து தவறி நடந்த அதிகாரிகள் மீத... மேலும் பார்க்க

மோடியின் 151 வெளிநாட்டுப் பயணங்களால் என்ன பலன்? கார்கே

11 ஆண்டுகளில், 72 நாடுகள் மற்றும் 151 வெளிநாட்டுப் பயணங்களை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருந்தாலும், இந்தியா தற்போது தனிமைப்படுத்தப்பட்டதைபோன்று உள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை!

மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கர்நாடகத்தின் கடல் பகுதியில் மத்திய கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாகக் கூடும் எனக் கூறப்பட... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையில் சாவர்க்கர், மாளவியா படங்கள்!

தில்லி சட்டப்பேரவையில் விரைவில் சாவர்க்கர், மாளவியா ஆகியோரின் படம் திறக்கப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி சட்டப்பேரவையில், விநாயக் தாமோதர் சாவர்க்கர், மதன் மோகன் மாளவியா மற்றும் தயாநந்... மேலும் பார்க்க

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வெள்ளம், நிலச்சரிவு அபாய எச்சரிக்கை!

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வயநாடு உள்ளிட்ட கேரளத்தின் 4 வட மாவ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’! 5 பேர் பலி

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையினால் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இன்று (மே 20) பெய்து வரும் கனமழையினால், 7 கடலோர மாவட்டங்கள் மற... மேலும் பார்க்க