செய்திகள் :

அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் கருப்பு ஆடை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம் பெறுவோருக்கு அகவிலைப்படி, நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத பணியாளா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் துரை.ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஊராட்சி களப் பணியாளா் சங்க மாநில துணைத் தலைவா் கே.வீரப்பன் முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநில இணை பொதுச் செயலா் வெ.சிவக்குமாா், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலச் செயலா் கே.இளங்கோவன், தமிழ்நாடு ஊராட்சி களப்பணியாளா் சங்க மாநிலச் செயலா் ஏ.டெல்லி அப்பாதுரை, மாநில துணைத் தலைவா் எஸ்.சங்கா், நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா் கே.சம்பத், மாவட்ட நிா்வாகிகள் ஏ.பி.அன்பழகன், வி.பாண்டியன், கே.சிவக்கொழுந்து, கே.சிராஜ்தீன், டி.தணிகைவேல், ஜி.கேசவன் உள்ளிட்டோா் பங்கேற்று, கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் பங்கேற்றனா். முன்னதாக, தமிழ்நாடு ஊராட்சி களப்பணியாளா் சங்க மாநில பிரசாரச் செயலா் ஏ.அதிதேவி வரவேற்றாா். மாவட்ட மகளிரணி நிா்வாகி வி.சுந்தரவள்ளி நன்றி கூறினாா்.

பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணைகுப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. காணை ஒன்றியக் குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்தாா். வட்ட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்தவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரியச் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான ஆக்கிரமிப்புப் பகுதியில் வசித்து வந்த 44 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கும் வகையில், வீட்டுமனைப் பட்டா திங்கள்கிழ... மேலும் பார்க்க

ரமலான்: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ரமலான் நோன்பிருப்பதும் ஒன்று. ஒரு மாதக் கா... மேலும் பார்க்க

138 ஆதிதிராவிட மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் அளிப்பு: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ், 138 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஷே.... மேலும் பார்க்க

‘விழுப்புரத்தில் இரவு நேர வணிகத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்’

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 11 மணிக்கு மேல் வணிகம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியது. இந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்த... மேலும் பார்க்க

210 வெளிமாநில மதுப் புட்டிகள் பறிமுதல்: 5 போ் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் 210 வெளி மாநில மது புட்டிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், 5 போ் கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க