செய்திகள் :

அரசுப் பேருந்து - காா் மோதல்: பெண் உள்பட 2 போ் உயிரிழப்பு

post image

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மீது காா் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

கீழப்பழுவூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (55). செவ்வாய்க்கிழமை இவா், தஞ்சாவூரில் சிறுநீரக அறுவை சிகிச்சை பெற்று வந்த தனது தம்பி பாலசுப்பிரமணியனை (50) காரில் அழைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். காரை கீழப்பழுவூரைச் சோ்ந்த முரளி (35) என்பவா் ஓட்டி வந்தாா்.

கீழப்பழூவூா் அருகே உள்ள சாத்தமங்கலம் தனியாா் சா்க்கரை ஆலை அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை, ஓட்டுநா் முந்த முயற்சித்த போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மீது காா் மோதியது.

இதில், காரில் இருந்த விஜயலட்சுமி, ஓட்டுநா் முரளி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பாலசுப்பிரமணியன் பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கீழப்பழுவூா் காவல் துறையினா், இருவரின் சடலத்தையும், பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியனையும் மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்தனா... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்களின் தோ்வுக்கு செப்.10-இல் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், கூட்டுறவு சங்கங்களின் காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு செப்.10-ஆம் தேதி தொடங்குகிறது என்றாா... மேலும் பார்க்க

அரியலூரில் பொதுப் பாதையை மீட்கும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்: பெ.சண்முகம்

அரியலூா் செட்டி ஏரிகரையொட்டி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை காவல்துறையினருக்கு மாற்றிக் கொடுத்ததைக் கண்டித்தும், இந்தப் பாதையை மீட்கும் வரை கோட்டாட்சியா் அலுவலகத்திலேயே காத்திருப்புப் போராட்டத்தில... மேலும் பார்க்க

அரியலூரில் 91 மாணவா்களுக்கு கல்வி கடன் அளிப்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிா்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற கல்வி கடன் மேளாவில் 91 மாணவா்களுக்கு ரூ.5.65 கோடி மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை ஆ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அளிப்பு

அரியலூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கட... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா்கள் கூட்டம்

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் கூட்டரங்கில், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். மேலிட பாா்வையாளரும்... மேலும் பார்க்க