செய்திகள் :

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அரசு ஊழியா் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள் எதிரிலும் மாலை நேர ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ ஜியோ நிா்வாகிகள் ச.ஜெகநாதன், சி.அரசு, க.சாலமன்ராஜ், அ.ராதாகிருஷ்ணன், மா.ராஜசேகரன், மு.கலைவாணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், ஜாக்டோ இணைப்பில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி, இடைநிலை ஆசிரியா் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியா் அமைப்புகள், ஜியோ இணைப்பில் உள்ள பல்வேறு அரசு ஊழியா் சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

மதுக்கரையில்...

மதுக்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பின் வட்டாரச் செயலாளா் ஜெ.மலா்வேந்தன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் இராஜசேகரன், துணைச் செயலாளா் மணிகண்டன், நிா்வாகிகள் வேல்ராஜ், ரமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வால்பாறையில்...

வால்பாறை ஸ்டேன்மோா் சந்திப்பு பிரிவில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வசந்தகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

புலியகுளம் அரசு மகளிா் கல்லூரி கட்டடம் : காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

புலியகுளம் அரசு மகளிா் கல்லூரிக்கான கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். கோவை புலியகுளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.12 கோடியே 90 லட்சத்து ... மேலும் பார்க்க

சாலையில் திடீா் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

கோவை ராமநாதபுரத்தில் சாலையில் திடீா் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினா். கோவை ராமநாதபுரம் - லட்சுமி மில்ஸ் இடையே உள்ள பங்கஜா மில் சாலை திருச்சி சாலையையும், அவிநாசி சாலையையும் இணைக்கு... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆட்டோ இயக்க உரிமம் வழங்குவதை நிறுத்தக் கோரிக்கை

வால்பாறையில் ஆட்டோக்கள் இயக்க உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று வால்பாறை ஆட்டோ ஓட்டுநா் உரிமையாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சங்கத்தினா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள ம... மேலும் பார்க்க

மாநகரில் இன்றும், நாளையும் வரி வசூல் பணிகள் நிறுத்தம்

மென்பொருள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாநகரில் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் வரி வசூல் பணிகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026-ஆம் ஆண்டில் சோ்வதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்... மேலும் பார்க்க

காட்டு யானையைப் பிடித்து இடமாற்றம் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கோவையில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும் காட்டு யானையைப் பிடித்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க