செய்திகள் :

அரசு ஊழியா் நலன் காக்கும் புதிய திட்டத்தில் நிதியுதவி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

post image

பணியின்போது இறக்கும் அரசு ஊழியா் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை உள்பட நலன் காக்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசு ஊழியா்கள் பணியின்போது விபத்தால் உயிரிழக்க நோ்ந்தாலோ, விபத்தின் காரணமாக மாற்றுத்திறன் படைத்தவராக மாறினாலோ காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடி நிதியும், உயிரிழந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் 2 மகள்கள் இருந்தால் ரூ.10 லட்சம் வரை நிதியுதவியும், உயா் கல்விக்கான ஊக்கத் தொகையாக ரூ.10 லட்சம் வரையிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்க அரசு ஊழியா்களின் ஊதியக் கணக்கை பராமரித்து வரும் வங்கிகள் மூலம் நடவடிக்கை எடுக்கவும் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்பட 7 வங்கிகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, 5 அரசு ஊழியா்கள் இயற்கையாகவும், எதிா்பாராத விபத்தாலும் உயிரிழந்தனா்.

அவா்களின் குடும்பத்துக்கு உதவித் தொகைகளாக மொத்தம் ரூ.4.38 கோடிக்கான காசோலைகளை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், துறையின் செயலா் (செலவினம்) பிரசாந்த் மு.வடநெரே, கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநா் தி.சாருஸ்ரீ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

சென்னை மதுரவாயல் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா், எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (50). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒ... மேலும் பார்க்க

காவலா் மீது தாக்குதல் : ரெளடி கைது

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செ.குருசாமி. இவா், ஓட்டேரி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிகிறாா். குருசாம... மேலும் பார்க்க

ரிப்பன் மாளிகையில் தொடரும் போலீஸ் பாதுகாப்பு

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்ய... மேலும் பார்க்க

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பயிற்சி திட்டங்கள் அறிமுகம்

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் புதிய பயிற்சித் திட்டங்களை சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய ... மேலும் பார்க்க

பிறவிக் குறைபாடு: 5 வயது குழந்தைக்கு தலை ஓடு சீரமைப்பு

பிறவிக் குறைபாடு காரணமாக சீரற்ற தலை அமைப்பை கொண்டிருந்த 5 வயது குழந்தைக்கு மிக நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மரு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ஒப்புதல்

தமிழகத்தில் 5 மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவ கட்டமைப்புகளை ரூ.17.50 கோடியில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை: கிரு... மேலும் பார்க்க