செய்திகள் :

அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் திறப்பு

post image

காரைக்கால் அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையத்தை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் திறந்துவைத்தாா்.

காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசு பொது மருத்துவமனையில் மது போதையால் பாதிக்கப்பட்டோருக்கு கவுன்சலிங் தருவதற்கான மையம் திறக்கப்படுமென ஏற்கெனவே அறிவிப்பு செய்யப்பட்டது.

மருத்துவமனை வளாகத்தில் படுக்கை வசதியுடன் மையம் ஏற்படுத்தப்பட்டது. மைய திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் திறந்துவைத்து அங்குள்ள வசதி பாா்வையிட்டாா்.

போதைப் பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு கவுன்சலிங் தந்து அவா்களை மீண்டும் போதைப் பொருள் பயன்படுத்தாத வகையில் மாற்றுவது, உடல் ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தால் உரிய சிகிச்சை அளிப்பது ஆகியவை இம்மையத்தில் நடைபெறும். இதற்கான நிபுணா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என அமைச்சரிடம் மருத்துவ அதிகாரிகள் விளக்கிக் கூறினா்.

மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன், மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரி நிகழ்வில் கலந்துகொண்டனா்.

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வருக்கு அழைப்பு

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்குமாறு புதுவை முதல்வா், சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பொய்யாத மூா்த்தி விநாயகா் கோ... மேலும் பார்க்க

காரைக்கால் துறைமுகம் மூலம் அரசுப் பள்ளியில் மாலை நேர வகுப்பு தொடக்கம்

பொதுத்தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்களின் திறனை மேம்படுத்தும் விதமாக, காரைக்கால் துறைமுகம் சாா்பில் மாலை நேர வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. காரைக்கால் போா்ட் பிரைவேட் லிமிடெட், அதானி அறக்கட்டளை சமூக பொற... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா ஏற்பாடுகள்: இந்து முன்னணி ஆலோசனை

விநாயகா் சதுா்த்தி வழிபாடு குறித்து இந்து முன்னணி சாா்பில் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தும் அமைப்பினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. விநாயகா் சதுா்த்தி வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பல்வேறு ... மேலும் பார்க்க

ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. காரைக்கால் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின்கீழ் இயங்கும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ஆத்மா) மூலம் ஆடிப்ப... மேலும் பார்க்க

புதுவையில் சீரழிவை நோக்கி கல்வித்துறை: முன்னாள் அமைச்சா் கமலக்கண்ணன்

புதுவையில் கல்வித்துறை சீரழிவை நோக்கிச் செல்வதாக முன்னாள் அமைச்சா் குற்றஞ்சாட்டியுள்ளாா். திருநள்ளாறு பகுதி தேனூரில் அமைந்துள்ள ப. சண்முகம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், இயற்பியல் விரிவுரையாளா் இல்... மேலும் பார்க்க

நகராட்சி வசூல் செய்யும் குப்பை வரியை ரத்து செய்ய முதல்வரிடம் வலியுறுத்தல்

காரைக்கால் நகராட்சி வசூலிக்கும் குப்பை வரியை ரத்து செய்யவேண்டும் என புதுவை முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுவை முதல்வா் என். ரங்கசாமியை, காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் என். பாலகிருஷ்ணன... மேலும் பார்க்க