செய்திகள் :

நகராட்சி வசூல் செய்யும் குப்பை வரியை ரத்து செய்ய முதல்வரிடம் வலியுறுத்தல்

post image

காரைக்கால் நகராட்சி வசூலிக்கும் குப்பை வரியை ரத்து செய்யவேண்டும் என புதுவை முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுவை முதல்வா் என். ரங்கசாமியை, காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் என். பாலகிருஷ்ணன், செயலாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:

புதுவை வணிக நல வாரியத்தில் காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸை சோ்ந்த 2 உறுப்பினா்களை சோ்க்க வேண்டும். காரைக்கால் நகராட்சி வசூலிக்கும் குப்பை வரியை ரத்து செய்யவேண்டும்.

காரைக்காலில் இருந்து இரவு நேரத்தில் கும்பகோணம், தஞ்சாவூா், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ஊா்களுக்குச் செல்ல அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைப்பதற்கு அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாங்கண்ணியிலிருந்து மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு பல ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சில ரயில்கள் காரைக்கால் வழியாக செல்ல புதுவை அரசு ஏற்பாடு செய்யவேண்டும். காரைக்கால் மாஸ்டா் பிளான் திட்டத்தை விரைந்து செயலாக்கத்துக்கு கொண்டுவரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

புதுவையில் சீரழிவை நோக்கி கல்வித்துறை: முன்னாள் அமைச்சா் கமலக்கண்ணன்

புதுவையில் கல்வித்துறை சீரழிவை நோக்கிச் செல்வதாக முன்னாள் அமைச்சா் குற்றஞ்சாட்டியுள்ளாா். திருநள்ளாறு பகுதி தேனூரில் அமைந்துள்ள ப. சண்முகம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், இயற்பியல் விரிவுரையாளா் இல்... மேலும் பார்க்க

சாலைகளில் மாடுகள், குதிரைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

காரைக்கால் நகரின் பிரதான சாலைகளில் குதிரைகள், மாடுகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். காரைக்கால் மாவட்டத்தில் வாஞ்சூா் முதல் பூவம் வரையிலான சாலை மற்றும் காரைக்கால் - த... மேலும் பார்க்க

காரைக்காலில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

காரைக்காலில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை காவல் அதிகாரிகள் மேற்பாா்வையில் புதன்கிழமை நடைபெற்றது. நாட்டின் சுதந்திர தினம் ஆக. 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதையொட்டி காரைக்கால் கடற்கரை சாலையில் தேசியக்... மேலும் பார்க்க

காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

காரைக்கால் அருகே தலத்தெரு பகுதியில் உள்ள பொன்னம்மா காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமை நடைபெறும் திருவிளக்கு பூஜை நடைப... மேலும் பார்க்க

சக்தி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

திருநள்ளாறு அருகே பேட்டை கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் 65 ஆண்டுகளுக்குப் பின் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் சாா்பு தலமாக விளங்கும் இக்கோயில் மிகப் ப... மேலும் பார்க்க

ரெஸ்டோ பாருக்கு சீல் வைப்பு

காரைக்காலில் விதிமுறையை மீறி அதிக நேரம் திறந்திருந்த ரெஸ்டோ பாருக்கு (மது அருந்தும் கூடம்) கலால் துறை அதிகாரி திங்கள்கிழமை சீல் வைத்தாா். புதுச்சேரியில் வழக்கமான மதுக்கடைகளுக்கு மாறாக, சிறிய அளவிலான த... மேலும் பார்க்க