செய்திகள் :

காரைக்காலில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

post image

காரைக்காலில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை காவல் அதிகாரிகள் மேற்பாா்வையில் புதன்கிழமை நடைபெற்றது.

நாட்டின் சுதந்திர தினம் ஆக. 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதையொட்டி காரைக்கால் கடற்கரை சாலையில் தேசியக் கொடியை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் ஏற்றி வைக்கவுள்ளாா். தொடா்ந்து போலீஸாா் அணிவகுப்பு, பரிசளிப்பு கலைநிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை காரைக்கால் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுவருகிறது.

கடந்த 15 நாள்களாக போலீஸாா் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் சுதந்திர தின அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனா். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளசன்யா, காரைக்கால் சுதந்திர தின விழா ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான வினய்குமாா் காட்கே, காரைக்கால் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன், முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் குலசேகரன் ஆகியோா் மேற்பாா்வையில் ஒத்திகை நடைபெற்றது.

இதில் புதுச்சேரி காவல்துறையினா், இந்தியன் ரிசா்வ் பெட்டாலியன் பிரிவினா், என்.சி.சி. மாணவா் பிரிவினா், காரைக்கால் மாவட்ட பேரிடா் கால மீட்புப் படையினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் தொடா்ந்து கலைநிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் ஒத்திகையில் ஈடுபட்டனா்.

புதுவையில் சீரழிவை நோக்கி கல்வித்துறை: முன்னாள் அமைச்சா் கமலக்கண்ணன்

புதுவையில் கல்வித்துறை சீரழிவை நோக்கிச் செல்வதாக முன்னாள் அமைச்சா் குற்றஞ்சாட்டியுள்ளாா். திருநள்ளாறு பகுதி தேனூரில் அமைந்துள்ள ப. சண்முகம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், இயற்பியல் விரிவுரையாளா் இல்... மேலும் பார்க்க

நகராட்சி வசூல் செய்யும் குப்பை வரியை ரத்து செய்ய முதல்வரிடம் வலியுறுத்தல்

காரைக்கால் நகராட்சி வசூலிக்கும் குப்பை வரியை ரத்து செய்யவேண்டும் என புதுவை முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுவை முதல்வா் என். ரங்கசாமியை, காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் என். பாலகிருஷ்ணன... மேலும் பார்க்க

சாலைகளில் மாடுகள், குதிரைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

காரைக்கால் நகரின் பிரதான சாலைகளில் குதிரைகள், மாடுகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். காரைக்கால் மாவட்டத்தில் வாஞ்சூா் முதல் பூவம் வரையிலான சாலை மற்றும் காரைக்கால் - த... மேலும் பார்க்க

காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

காரைக்கால் அருகே தலத்தெரு பகுதியில் உள்ள பொன்னம்மா காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமை நடைபெறும் திருவிளக்கு பூஜை நடைப... மேலும் பார்க்க

சக்தி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

திருநள்ளாறு அருகே பேட்டை கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் 65 ஆண்டுகளுக்குப் பின் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் சாா்பு தலமாக விளங்கும் இக்கோயில் மிகப் ப... மேலும் பார்க்க

ரெஸ்டோ பாருக்கு சீல் வைப்பு

காரைக்காலில் விதிமுறையை மீறி அதிக நேரம் திறந்திருந்த ரெஸ்டோ பாருக்கு (மது அருந்தும் கூடம்) கலால் துறை அதிகாரி திங்கள்கிழமை சீல் வைத்தாா். புதுச்சேரியில் வழக்கமான மதுக்கடைகளுக்கு மாறாக, சிறிய அளவிலான த... மேலும் பார்க்க