செய்திகள் :

அரியலூர்: பச்சிளங்குழந்தை கழிவறைக்குள் அமுக்கி கொலை; இளம் பெண் கைது; பகீர் பின்னணி என்ன?

post image

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கண்டராதீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதியராஜ்.

இவர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு, கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரது மனைவி மற்றும் மகள் லாரா ஆகியோர் மருத்துவமனையில் தங்கி வேதியராஜைக் கவனித்து வந்துள்ளனர்.

டாய்லெட்டுக்குள் குழந்தை சடலம்
டாய்லெட்டுக்குள் குழந்தை சடலம்

திருமணமாகாத இருபது வயது லாரா, எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைக்கு லாராவும் அவரது தாயும் சென்றனர்.

அப்போது, லாரா மட்டும் கழிவறைக்குள் சென்ற நிலையில், அவரது தாய் வெளியே நின்றுள்ளார்.

இதையடுத்து, கர்ப்பிணியாக இருந்த லாரா, கழிவறைக்குள் தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொண்டார்.

சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு லாராவிற்கு குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு, லாரா செய்ததும், அவரது தாய் உடந்தையாக இருந்ததும் கொடூரத்தின் உச்சம்.

பிறந்த பச்சிளங்குழந்தையைத் தலைகீழாகத் தூக்கி, தலையைக் கழிவறைக்குள் திணித்து அழுத்தி, லாரா கொலை செய்துள்ளார். ஆனால், கால்கள் மட்டும் உள்ளே செல்லாமல் டாய்லெட்டில் நீட்டிக் கொண்டிருந்தன.

குழந்தைக்கு நேர்ந்த சோகம்
Baby

இந்நிலையில், தூய்மைப் பணியாளர் ஒருவர் அங்கு வந்ததும், எதுவும் நடக்காதது போல் லாராவும் அவரது தாயும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

டாய்லெட்டைப் பார்த்த தூய்மைப் பணியாளர் அதிர்ச்சியடைந்து, மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, அரியலூர் நகரப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, டாய்லெட்டை உடைத்து குழந்தையின் சடலத்தை வெளியே எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, தப்பிச் செல்ல முயன்ற லாராவை போலீசார் கைது செய்தனர். தற்போது லாராவுக்கு அரியலூர் பழைய அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பிரசவ வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனை போலீசார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.லாரா கர்ப்பமாவதற்குக் காரணம் யார், பச்சிளங்குழந்தையைக் கொலை செய்வதற்குக் காரணம் என்ன என்று பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அரியலூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

படித்தது பிளஸ் 2; 18 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை -திருப்பரில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்!

திருப்பூர் முருகம்பாளையம் கிராமத்தில் சூர்யா கிருஷ்ணா நகர் 1-ஆவது வீதியில் ஹிமாலயா பார்மசி என்ற மருந்துக் கடை இயங்கி வருகிறது. ஜோலி அகஸ்டின் என்பவர் இந்த மருந்துக் கடையை நடத்தி வருகிறார். கேரளத்தைச் ச... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? அதிர்ச்சி தகவல்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் ‘யுதிரா சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு காப்பகம் செயல்பட்டு வருகிறது. கவிதா, ஷாஜி, கிரி ஆகியோர் அதன் உரிமையாள... மேலும் பார்க்க

'உங்கக் கிட்ட இருக்க கறுப்புப் பணத்துல 1 கோடி வேணும்' - எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம்

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீட்டுக்கு காளப்பட்டி தபால் நிலையத்தில் 15.5.2025 முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்று... மேலும் பார்க்க

சென்னை: ஏஐ மூலம் ஆபாச வீடியோ - மணிப்பூர் இளம் பெண்ணை பழிவாங்க ஆசைப்பட்ட டிரைவர் சிக்கியது எப்படி?

மணிப்பூரைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 2024-ல் சென்னை சூளைமேடு பகுதியில் தங்கியிருந்து சலூன் ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்தச் சமயத்தில் அவர் பைக் கால்டாக்ஸி மூலம் அடிக்கடி பயணித்திருக... மேலும் பார்க்க

கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை - பள்ளி மாணவர்கள் உதவியோடு உடலை காட்டில் எரித்த பெண் பிரின்சிபால்

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் அருகில் உள்ள செளசாலா வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கடந்த 15ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் எரிந்து கிடந்... மேலும் பார்க்க

``அம்மா நான் திருடல" - உயிரைப் பறித்த 3 சிப்ஸ் பாக்கெட்; குமுறும் பெற்றோர் - என்ன நடந்தது?

மேற்குவங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூரின் பன்சுரா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்து தாஸ். 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனான இவர் மீது, கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், கோசைன்பர் சந்தையில் இருக்கும் ஒ... மேலும் பார்க்க