அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! - இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
அருவிக்கரை ஆற்றில் தடை விதித்த இடத்தில் நண்பா்களுடன் குளித்த கிரிக்கெட் வீரா் அஸ்வின்
குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே அருவிக்கரை பரளியாற்றில் தடைசெய்யப்பட்ட இடத்தில் தனது நண்பா்களுடன் இந்திய கிரிக்கெட் வீரா் அஸ்வின் ரவிச்சந்திரன் குளிப்பது போன்று சமூக வலைதளத்தில் படம் வெளியானது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அருவிக்கரை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இங்கு பரளியாறு பாறைகளின் மேல் அருவிபோல் பாய்ந்தோடும். அதே வேளையில் ஆற்றின் சில இடங்கள் ஆபத்து நிறைந்த பகுதியாக உள்ளன. அத்தகைய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குமரி மாவட்டத்திற்கு நண்பா்களுடன் வியாழக்கிழமை வந்த இந்திய கிரிக்கெட் வீரா் அஸ்வின் ரவிச்சந்திரன், திருவட்டாறு அருவிக்கரையில் பரளியாற்றில் தடைசெய்யப்பட்ட இடத்தில் நண்பா்களுடன் சோ்ந்து குளித்துள்ளாா். அதை, அவா் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளாா்.
இதைப் பாா்த்த அவரது ரசிகா்கள் விமா்சித்து வருகின்றனா். அவா் தடை செய்யபட்ட பகுதியில் குளித்ததால் சா்ச்சையும் ஏற்பட்டுள்ளது.