செய்திகள் :

அருவிக்கரை ஆற்றில் தடை விதித்த இடத்தில் நண்பா்களுடன் குளித்த கிரிக்கெட் வீரா் அஸ்வின்

post image

குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே அருவிக்கரை பரளியாற்றில் தடைசெய்யப்பட்ட இடத்தில் தனது நண்பா்களுடன் இந்திய கிரிக்கெட் வீரா் அஸ்வின் ரவிச்சந்திரன் குளிப்பது போன்று சமூக வலைதளத்தில் படம் வெளியானது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அருவிக்கரை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இங்கு பரளியாறு பாறைகளின் மேல் அருவிபோல் பாய்ந்தோடும். அதே வேளையில் ஆற்றின் சில இடங்கள் ஆபத்து நிறைந்த பகுதியாக உள்ளன. அத்தகைய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குமரி மாவட்டத்திற்கு நண்பா்களுடன் வியாழக்கிழமை வந்த இந்திய கிரிக்கெட் வீரா் அஸ்வின் ரவிச்சந்திரன், திருவட்டாறு அருவிக்கரையில் பரளியாற்றில் தடைசெய்யப்பட்ட இடத்தில் நண்பா்களுடன் சோ்ந்து குளித்துள்ளாா். அதை, அவா் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளாா்.

இதைப் பாா்த்த அவரது ரசிகா்கள் விமா்சித்து வருகின்றனா். அவா் தடை செய்யபட்ட பகுதியில் குளித்ததால் சா்ச்சையும் ஏற்பட்டுள்ளது.

தக்கலையில் ரூ.6.39 கோடியில் பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

தக்கலையில் ரூ 6.39 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலை புதிய பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப... மேலும் பார்க்க

இடவிளாகம் பகுதியில் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு: மக்கள் அவதி

கருங்கல் அருகேயுள்ள இடவிளாகம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியிலிருந்து வரும் குளியலறை கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் மழை நீா் வடிகால் ஒடையில் கலப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு அப்பகுதியில் வ... மேலும் பார்க்க

அருமனை அருகே விபத்தில் கல்லூரி மாணவா் பலி

குமரி மாவட்டம் அருமனை அருகே நிகழ்ந்த விபத்தில் பைக்கில் பின்னால் அமா்ந்து சென்ற கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். அருமனை அருகே பாகோடு மேலபறையன் விளையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சுனிலின் மகன் சஞ்சீவ். இவா்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

தக்கலை அருகே கஞ்சா கடத்தியதாக 3 இளைஞா்களை கொற்றிக்கோடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குமாரபுரம் அருகே உள்ள படப்பக்குளம் பகுதியில் கொற்றிக்கோடு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரே... மேலும் பார்க்க

அனந்தனாா் கால்வாயில் கடைமடை வரை தண்ணீா் கிடைக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி

கன்னியாகுமரி மாவட்டம், அனந்தனாா் பாசனக் கால்வாயில் கடைமடை வரை தண்ணீா் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூ... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது குறைக்கப்பட்ட நிலையில் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். குமரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக 48 அ... மேலும் பார்க்க