செய்திகள் :

`அ.தி.மு.க-வின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் தொலைவில் இல்லை' - மாணிக்கம் தாகூர்

post image

விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1,01,800 மதிப்புள்ள மூன்று வாகனங்கள் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8,14,400 மதிப்பில் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராகுல் காந்தியின் பீகார் யாத்திரையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டது மிக முக்கியமானது. அவர் சொன்னதை போல் சொந்த மக்களின் வாக்குகளை திருடி தேர்தலில் வெற்றி பெறுவது என்பது பயங்கரவாதத்திற்கு ஈடானது. இந்த செயல் குறிப்பிட்ட விதத்திலே ஆர்.எஸ்.எஸ்-ன் துணையினோடு குஜராத் மாடலாக மாறியிருக்கிறது. பா.ஜ.க-வின் வாக்காளர்களுக்கு மட்டும் ஐந்து வாக்குகளும், மற்றவர்களுக்கு ஒரு வாக்கும் அளிக்கக்கூடிய குஜராத் மாடலாக இருக்கிறது. இதனையே இந்தியா முழுவதும் பரப்பப்பட்டிருக்கிறது. இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டு பீகாரில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த சதியை ராகுல் காந்தி முறியடித்திருக்கிறார். இந்த யாத்திரையில் பங்கேற்ற முதல்வருக்கு நன்றி.

மாணிக்கம் தாகூர்

பா.ஜ.க-வை வெற்றி பெற செய்யும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக ராஜீவ் குமார், ஞானேஷ்வர் குப்தா ஆகியோரின் கைகளில் இருந்து தேர்தல் ஆணையத்தை விடுதலை செய்ய வேண்டும். இந்த வாக்கு திருட்டில் இருந்து இந்தியாவினுடைய ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். இதற்காக எங்களது போராட்டமும், பயணமும் தொடர்கிறது. அ.தி.மு.க-வை ஆர்.எஸ்.எஸ் வழிநடத்துவது தவறில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியிருந்தது. குறித்த கேள்விக்கு. ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க இருப்பது என்பதை எல்.முருகனின் கருத்து உறுதி செய்திருக்கிறது. அ.தி.மு.க ஆர்.எஸ்.எஸினுடைய ஒரு அங்கமாக மாறிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது. எம்.ஜி.ஆர் துவங்கிய அ.தி.மு.க அமித்ஷா-வின் அ.தி.மு.க-வாக மாறிவிட்டது.

ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பாக இ.பி.எஸ் மாற்றிவிட்டார். அ.தி.மு.க-வினர் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. இரட்டை இலை சின்னம் மட்டும் கையில் இருக்கிறது. மொத்த கட்சியும் ஆர்.எஸ்.எஸ்-ன் கைக்கு சென்று விட்டது. அ.தி.மு.க-வின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் தொலைவில் இல்லை.

"புதிய பாஜக தலைவர் தேர்வு செய்யும் பணி; யார் முடிவெடுப்பது..!" - RSS தலைவர் மோகன் பகவத் சொன்ன பதில்

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா மூன்று நாள் கருத்தரங்கு தொடர் சொற்பொழிவுடன் நடைபெற்று வருகிறது. இதில் செய்தியாளர்களிடம் பேசி வரும் மோகன் பகவத், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலள... மேலும் பார்க்க

UK: நாடு முழுவதும் பாகிஸ்தான் பாலியல் வன்கொடுமை கும்பல் அட்டூழியம் - சுயேச்சை எம்.பி குற்றச்சாட்டு!

ஐக்கிய ராச்சியத்தில் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் தனிப்பட்ட முறையில் நடத்திய விசாரணையில் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை நடத்தும் கும்பல்கள் கண்டறியப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 85 அதிக... மேலும் பார்க்க

ராகுல் காந்தி: `குஜராத் கட்சிகள் பெற்ற ரூ.4300 கோடி நன்கொடை என்ன ஆனது'- தேர்தல் ஆணையம் விசாரிக்குமா?

குஜராத் மாநிலத்தில் உள்ள 10 சிறிய முகம் தெரியாத கட்சிகள் 2019-20 மற்றும் 2023-24 கால கட்டத்தில் ரூ.4300 கோடி நன்கொடை வாங்கியதாக வெளியான ஊடக அறிக்கைகளைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கா... மேலும் பார்க்க

'இந்தியா நினைத்தால் நாளைக்கே 25% வரியில் இருந்து தப்பிக்க முடியும்' - ட்ரம்பின் ஆலோசகர் பேச்சு

இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவிகித வரி அமலுக்கு வந்துவிட்டது. இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ அமெரிக்க தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ... மேலும் பார்க்க

`விஜய் வருகை பல அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை' - டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயல... மேலும் பார்க்க

கழுகார் : `கன்ட்ரோலில் சொத்துகள்’ - ஆளும் தரப்பிலிருந்து `சின்ன தலைவி’க்கு ஆதரவு கொடுப்பது யார்?

மனம் வெதும்பும் மீசைத் தலைவர்!“கூட்டணியில் இருந்து என்ன பயன்?”தமிழகத்தையே உலுக்கிய ஆணவப் படுகொலைக்குப் பிறகு, முதன்மையானவரைச் சந்தித்த மீசைத் தலைவர், ‘ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை’ உடனடியாக நிறைவே... மேலும் பார்க்க