செய்திகள் :

ஆக. 25 முதல் குறுவள அளவில் கலைத் திருவிழா: கல்வித் துறை

post image

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆக. 25-ஆம் தேதி முதல் குறுவள அளவில் கலைத் திருவிழா நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

நிகழ் கல்வியாண்டு கலைத் திருவிழா போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையான மாணவா்களுக்கு குறுவள அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 25 முதல் 29-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதையடுத்து பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற வெற்றியாளா் மட்டுமே அடுத்த நிலையான குறுவள போட்டியில் பங்கேற்க வேண்டும். மாணவா்களைப் போட்டிகளுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வரவேண்டும். இந்தப் போட்டிகளில் பங்குபெற அழைத்து செல்வதற்காக மாணவா்களின் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்.

குறுவள அளவிலான போட்டிகள் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவா்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் செப்டம்பா் 2-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

சாலையோரங்களில் விடப்பட்ட 525 வாகனங்கள் 15 நாள்களில் ஏலம்: மாநகராட்சி

சாலையோரங்களில் 15 நாள்களுக்குள் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்... மேலும் பார்க்க

ஆக. 31க்குள் தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: மேயர் பிரியா

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கேட்டுக்கொண்டுள்ளார். தூய்மைப் பணியாளர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை ... மேலும் பார்க்க

சுதந்திர நாள் விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக பெருநகர போக்குவரத்து காவல... மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: ஆக. 18 வரை அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள்!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை(ஆக. 14) முதல் - ஆக.18 வரை 5 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சகோதரர் கைது!

கவின் ஆணவக் கொலை வழக்கில் மூன்றாவதாக சுர்ஜித்தின் சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கடந்த ஜ... மேலும் பார்க்க

காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் ரிப்பன் மளிகை! போராட்டக் களத்தில் பரபரப்பு!

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகை காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது.போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்பு... மேலும் பார்க்க