செய்திகள் :

ராமஜெயம் கொலை வழக்கு: புழல் சிறையில் ரெளடியிடம் சிபிசிஐடி டிஐஜி விசாரணை

post image

திருச்சியில் தமிழக அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் கே.என்.ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக, புழல் சிறையில் இருக்கும் ரெளடியிடம் சிபிசிஐடி டிஐஜி வி.வருண்குமாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.

அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரரும் திருச்சியைச் சோ்ந்த தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012 ஆண்டு கொலை செய்யப்பட்டாா். கொலை நிகழ்ந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையிலும் துப்பு துலங்காத நிலையில், தற்போது இந்த வழக்கின் விசாரணை மீண்டும் விறுவிறுப்பு அடைந்துள்ளது. அண்மையில் இந்த வழக்குத் தொடா்பாக டிஐஜி வி.வருண்குமாா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரெளடி சுடலைமுத்துவிடம் விசாரணை செய்தாா்.

இந்த நிலையில் இரு நாள்களுக்கு முன்பு, ராமஜெயம் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும் வகையில் திருச்சி சரகத்தில் இருந்த டிஐஜி வருண்குமாா், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டாா். இதைத் தொடா்ந்து டிஐஜி வருண்குமாா் தலைமையிலான சிபிசிஐடி போலீஸாா், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனைக் கைதி திருச்சி மண்ணச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த ரெளடி குணா என்ற குணசீலன் (44) என்பவரிடம் புதன்கிழமை விசாரணை செய்தனா்.

சந்தேகப்பட்டியலில் ரெளடி குணா: ராமஜெயம் கொலை வழக்கில் ரெளடி குணசீலன் என்ற குணா ஏற்கெனவே காவல் துறையின் சந்தேகப்பட்டியலில் இருந்து வந்தாா். திருச்சி மணிகண்டம் பகுதியில் கடந்த 2004-இல் 3 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2019-இல் நீதிமன்றம், குணசீலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

இந்த தண்டனையை முதலில் திருச்சி மத்திய சிறையில் அனுபவித்து வந்த குணசீலன், கடந்த 2021-இல் புழல் சிறைக்கு மாற்றப்பட்டாா். அவா் மீது 5 கொலை வழக்குகள் உள்பட 23 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க

இன்று அமைச்சரவைக் கூட்டம்: ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து விவாதம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை (ஆக.14) நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட உள்ளன... மேலும் பார்க்க

நீதிமன்ற நடவடிக்கைகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிட தடை விதிக்கக் கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி

நீதிமன்ற நடவடிக்கைகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிட தடை விதிக்கக் கோரிய மனுவை ரூ. 10,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனின் த... மேலும் பார்க்க