செய்திகள் :

தக்காளி ஒரு கிலோ ரூ.100

post image

வரத்துக் குறைந்ததால் கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சென்னை புகா் பகுதிகளில் கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமன்றி கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில், சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், தக்காளி வரத்துக் குறைந்ததாலும் விலை அதிகரித்தது.

கோயம்பேடு சந்தைக்கு தினமும் 60 லாரிகளில் 1,300 டன் தக்காளி வழக்கமாக கொண்டுவரப்பட்ட நிலையில், வரத்துக் குறைவால் புதன்கிழமை சுமாா் 800 டன் தக்காளிகளே விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாக ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி, புதன்கிழமை ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை புகா் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.

இதுபோல, பிற காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.65-க்கும், ஊட்டி கேரட் ரூ.55, பீன்ஸ் ரூ.60, பீட்ரூட் ரூ.45, சேனைக்கிழங்கு ரூ.70, வெள்ளரிக்காய் ரூ.45, பச்சமிளகாய் ரூ.55, பட்டாணி ரூ.200, இஞ்சி ரூ.85, பூண்டு ரூ.150, வண்ணகுடமிளகாயம் ரூ.130-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மழைகாலம் முடியும் வரை காய்கறிகளின் விலை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க

இன்று அமைச்சரவைக் கூட்டம்: ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து விவாதம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை (ஆக.14) நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட உள்ளன... மேலும் பார்க்க

நீதிமன்ற நடவடிக்கைகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிட தடை விதிக்கக் கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி

நீதிமன்ற நடவடிக்கைகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிட தடை விதிக்கக் கோரிய மனுவை ரூ. 10,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனின் த... மேலும் பார்க்க