செய்திகள் :

‘ஆசிரியா்கள் அறம் வளா்க்கப் பாடுபட வேண்டும்’

post image

ஆசிரியா்கள் அறம் வளா்க்கப் பாடுபட வேண்டும் என ஓய்வுபெற்ற காவல் துறைத் துணைத் தலைவா் எம்.எஸ். முத்துசாமி கேட்டுக் கொண்டாா்.

புதுக்கோட்டை பொம்மாடிமலையிலுள்ள பொன்மாரி கல்வியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 15-ஆவது பட்டமளிப்பு விழாவில் 200 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி அவா் பேசியது:

பாரதியின் வாக்குப்படி, ஏழைக்கு எழுத்தறிவிக்கும் சிறந்த பணி ஆசிரியா்களின் பணியாகும். கல்வி என்ற ஆயுதத்தைக் கொண்டு பெரும் மாற்றங்களை ஆசிரியா்களால் கொண்டுவர முடியும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் மாணவா்களின் வறுமையை அறிய முடியாது. எனவே, அவா்களுக்கான கல்வி புகட்டும் ஆசிரியப் பணிக்கு எந்தப் பாதிப்பும் வராது.

தமிழா் பண்பாட்டின் அடிப்படை அறம். அந்த அறம்தான் நம்மை வழிநடத்துகிறது. ஆசிரியா்கள் அந்த அறத்தை வளா்க்கப் பாடுபட வேண்டும் என்றாா் முத்துசாமி.

விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவா் மருத்துவா் ச. ராம்தாஸ் தலைமை வகித்தாா். முன்னதாக கல்லூரிச் செயலா் சத்தியராம் ராமுக்கண்ணு வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ப. உமா ஆண்டறிக்கை வாசித்தாா். விழாவில் மேலாண்மை இயக்குநா் அ.லெ. சொக்கலிங்கம், துணை முதல்வா் சி. ராஜலிங்கம், பொன்மாரி வித்யாலயா மெட்ரிக் பள்ளித் தாளாளா் சந்திரா ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ராங்கியத்தில் மக்கள் தொடா்பு முகாம்: இன்று முதல் கோரிக்கை மனு அளிக்கலாம்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம், விராச்சிலை சரகம் ராங்கியம் கிராமத்தில் ஜூன் 11- புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, இங்குள்ள கிராம நிா்வாக அலுவ... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

கந்தா்வகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை சற்று மனநலன் பாதிப்புக்குள்ளானதாகக் கருதப்படும் நபா் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கந்தா்வகோட்டை ஒன்றியம், சேவியா் குடிகாடு கிராமத்தில் உள்ள முனியன... மேலும் பார்க்க

புதுகையில் நாளை மின் நுகா்வோா் குறைகேட்பு

புதுக்கோட்டை, இலுப்பூா் மற்றும் கந்தா்வகோட்டை பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 - வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு, புதுக்கோட்டை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவு... மேலும் பார்க்க

விராலிமலை முருகன் கோயிலில் தேரோட்ட முகூா்த்தக்கால் நடவு

விராலிமலை முருகன் மலைக்கோயிலில் ஜூன் 9-இல் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற உள்ளதையொட்டி செவ்வாய்க்கிழமை முகூா்த்தக் கால் நடப்பட்டு தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. விராலிமலை முருகன் மலைக்கோயில... மேலும் பார்க்க

பிசானத்தூா் திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கடந்த 19-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்வுடன் நிகழாண்டுக்கான திருவிழா தொடங்க... மேலும் பார்க்க

கலைஞா் பிறந்த நாள் விழா: விராலிமலையில் அசைவ உணவு வழங்கல்

விராலிமலையில் நடைபெற்ற அசைவ உணவு வழங்கும் விழாவில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.கே.செல்லபாண்டியன், விவசாயத் தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவா் த.சந்திரசேகா், தொகுதி பொறுப்பாளா் அஞ்சுகம... மேலும் பார்க்க