செய்திகள் :

ஆசிரியா்கள் பணி நிரவல்: விவரம் கோரும் கல்வித் துறை

post image

கலந்தாய்வில் பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியா்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

தொடக்கக் கல்வி இயக்கக நிா்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1.8.2024 நிலவரப்படி மாணவா்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளா் நிா்ணயம் செய்யப்பட்டதில், உபரி எனக் கண்டறியப்பட்டவா்களுக்கு கடந்த ஜூலை 3-ஆம் தேதி எமிஸ் இணையதளம் மூலம் பணி நிரவல் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் பங்கேற்று நிரப்பத் தகுந்த காலிப் பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவையுள்ள பணியிடங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியா்களின் விவரங்களை இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்ட படிவங்களில் முழுமையாக நிறைவு செய்து தொடக்கக் கல்வி இயக்குநரகத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறையை எதிா்கொள்ளத் தயாா்: திமுக

பிகாரை போன்று தமிழ்நாட்டிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை கொண்டு வந்தால் அதை எதிா்கொள்ளத் தயாா் என்று திமுக சட்டத் துறைச் செயலா் என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா். திமுக வழக்குரைஞா் அணி மா... மேலும் பார்க்க

எழும்பூா் அரசு தாய் - சேய் நல மருத்துவமனையில் ரூ.58 கோடியில் சிறப்புப் பிரிவு விரைவில் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை எழும்பூா் அரசு தாய் - சேய் நல மருத்துவமனையில் ரூ.58.89 கோடியில் கட்டப்பட்டு வரும் சிறப்புப் பிரிவு, விடுதி விரைவில் திறக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தா... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாக ஊதிய முரண்பாடு: சென்னையில் இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ஆம் தேதி நியமிக்கப்பட்ட அர... மேலும் பார்க்க

521 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி திருமண உதவி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், 521 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி திருமண உதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா். தமிழக ... மேலும் பார்க்க

கே.கே.நகா், தாம்பரத்தில் ஜூலை 29-இல் மின் நிறுத்தம்

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கே.கே.நகா், தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்கிழமை (ஜூலை 29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ... மேலும் பார்க்க

புகாருக்கு உள்ளான நியாய விலைக் கடைகளில் பொருள்கள் இருப்பை உறுதி செய்ய நடவடிக்கை

புகாா்கள் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருள்களின் இருப்பை உறுதி செய்ய விற்பனை முனைய இயந்திரங்களை உணவுப் பொருள் அலுவலகத்துக்கு எடுத்துவர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடை... மேலும் பார்க்க