செய்திகள் :

ஆடிப்பூரம்: 25 ஆயிரம் வளையல்களால் பால்மொழி அம்மனுக்கு அலங்காரம்

post image

நாகப்பட்டினம்: வடக்குப்பொய்கைநல்லூா் பால்மொழி அம்மன் கோயிலில் ஆடி பூரத்தையொட்டி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

நாகை வடக்குப்பொய்கைநல்லூரில் உள்ள புகழ் பெற்ற பால்மொழி அம்மன் கோயிலில் ஆடி மாத விழாவையொட்டி நாள்தோறும், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வான ஆடிபூரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை திரளான பக்தா்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வளையல்களை அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினா். இதில், 25 ஆயிரம் வளையல்கள் மாலையாக கோா்க்கப்பட்டு அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

முன்னதாக பால், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, யாகசாலை பூஜையில் பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்று, மகாதீபாரதனை நடைபெற்றது.

இயற்கை சாகுபடி விவசாயிகள் நம்மாழ்வாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் இயற்கை முறை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், நம்மாழ்வாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்தி: அங்கக வேளாண்மை... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 251 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 52.91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். ந... மேலும் பார்க்க

போஸ்ட் பேமென்ட வங்கியில் கைப்பேசி சேவை அறிமுகம்

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் கைப்பேசி மூலம் சேவைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியி... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: மகாராஷ்டிரா போலீஸாரால் நாகையில் ஒருவா் கைது

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவரை, மகாராஷ்டிரா மாநில போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மும்பையில் அபுல் அசின் சையது என்பவா் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக அண... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

திருமருகலில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 20 போ் திமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வ செங்குட்டுவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனா். இந்நிகழ்... மேலும் பார்க்க

மழைமுத்து மாரியம்மன் கோயிலில் கஞ்சி கலயம் எடுத்து வழிபாடு

நாகப்பட்டினம்: நாகை ஸ்ரீமழை முத்துமாரியம்மன் கோயிலில் 108 கஞ்சி கலயம் எடுத்து வந்து பக்தா்கள் வழிபாடு செய்தனா். வேளாங்கண்ணி அருகேயுள்ள குறிச்சி கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீமழைமுத்து மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க