செய்திகள் :

ஆடிப்பெருக்கு தீர்த்தவாரி: கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளிய நடராஜர்!

post image

சிதம்பரம்: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி அண்ணையை வழிபடும் வகையில் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள், சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர். மேலும் சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமான் நீராட்டிற்காக அங்கு எழுந்தருளினார்.

காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரத்தை அடுத்த கொள்ளிடக்கரையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் குடும்பத்துடன் வந்து காவிரி அண்ணையை வழிபட்டு ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.

ஓடும் நீரில் புதுமனத் தம்பதியினர் தங்களது திருமண மாலையை விட்டால் தங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு வளரும் என்பது ஐதீகம். இதனால் புதுமணத் தம்பதிகள் தங்களது திருமண மாலையை ஆற்றில் விட்டு தாலியை பிரித்து கோத்து காவிரி அண்ணைக்கு படைத்து அணிந்து கொண்டனர்.

திரளான மக்கள் குடும்பத்தினருடன் வந்து மாவிளக்கு போட்டு, மஞ்சள் கயிறு, கருகமணி, வெற்றிலை, பாக்கு, அவல், பொறி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளிய ஸ்ரீநடராஜர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கிற்கு ஸ்ரீசந்திரசேகர சுவாமிகள் (ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜமூர்த்தி) கொள்ளிடம் ஆற்றிற்கு சென்று தீர்த்தவாரி வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிகழ்ச்சியை அதற்கான கட்டளைதாரர்கள் நடத்தி வந்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு இடையூறுகளினால் இந்த உற்சவம் நடைபெறாமல் நின்று போனது.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் கட்டளைதாரர்கள் உதவியுடன் மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு அன்று தீர்த்தவாரி உற்சவம் தொடங்கியது. இந்த ஆண்டும் ஸ்ரீநடராஜப் பெருமான் தீர்த்தவாரி உற்சவம் கொள்ளிடக்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கொள்ளிடம் ஆற்றின் ஓரம் உள்ள பழங்கால நீராழி (தீர்த்தவாரி) மண்டபத்தில் ஆடிப்பெருக்கான ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நடராஜர் கோயிலிலிருந்து உற்சவ மூர்த்தியான ஸ்ரீசந்திரசேகரசுவாமிகள் (ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்தி) அஸ்தராஜருடன் புறப்பட்டு சென்று எழுந்தருளினார். பின்னர் கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளி பொதுமக்களுக்கு தீர்த்தவாரி காட்சி வழங்கினார்.

இதையும் படிக்க: ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

Nataraja, who emerged from the Kollidam River with the help of Aadi Peruku

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான்: தொல். திருமாவளவன்

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சா... மேலும் பார்க்க

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

மறைந்த நடிகர் மதன் பாப் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நகைச்சுவை நடிகா் மதன் பாப் (71) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா். நகைச்சுவை நடிகரும், நிகழ்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை பெய்யும்!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடலை... மேலும் பார்க்க

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கோவை வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை மக்கள் உற்சாக முழக்கங்களுடன் வரவேற்றனர்.கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் ஞாயிறுக்கிழமை கோவை வந்... மேலும் பார்க்க

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

தர்மபுரி மாவட்ட பாமக நிர்வாகி கைதைக் கண்டித்து அந்த கட்சியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பென்னாகரம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு தொடக்க விழா... மேலும் பார்க்க

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம்: டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகியது வருத்தமளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வில... மேலும் பார்க்க