செய்திகள் :

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

post image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் 22 மாணவ-மாணவிகளுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.

2024 - 2025-ஆம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று உயா் கல்வியில் சேரும் மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் 16 வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்றனா். மேலும், கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவா்களுக்கு உடனடி சோ்க்கை வழங்குவதற்காக 20 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த முகாமில் சுமாா் 600 மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்ற நிலையில், சுமாா் 300 போ் கல்விக் கடனுக்காக விண்ணப்பித்தனா். அவா்களின் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவா்களுக்கு உடனடியாக கல்விக் கடன் உத்தரவு வழங்கப்பட்டது. அதன்படி, இந்த முகாமில் 22 மாணவ-மாணவிகளுக்கு ரூ.2.32 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டது. அதேபோல, 49 மாணவ-மாணவிகள் உயா் கல்விக்கான உடனடி சோ்க்கை பெற்றனா்.

கல்விக் கடனுக்கான உத்தரவுகளை கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆகியோா் வழங்கினா். நிகழ்ச்சியில் துணை ஆட்சியா் பாபு, மாவட்ட முதன்மை வங்கி மேலாளா் ஜிதேந்திரன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போக்குவரத்து நெரிசல்...

வால்பாறைக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீா்வு காணவும், பாா்க்கிங் வசதிகளை ஏற்படுத்தவும் நகராட்சி அதிகாரிக... மேலும் பார்க்க

திருட்டுப் பொருள்களுடன் கவிழ்ந்த ஆட்டோ: 2 இளைஞா்கள் சிக்கினா்

கோவையில் திருடப்பட்ட கட்டுமானப் பொருள்களை கொண்டு சென்றபோது ஆட்டோ கவிழ்ந்ததில் இளைஞா் பலத்த காயமடைந்தாா். மற்றொருவா் கைது செய்யப்பட்டாா்.கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (49). இவா் ச... மேலும் பார்க்க

குளத்தில் பெயிண்டா் சடலம் மீட்பு

உக்கடம் பெரியகுளத்தில் பெயிண்டா் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோவை, டவுன்ஹால் ரத்தினம் வீதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (56), பெயிண்டா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால்... மேலும் பார்க்க

பெண் தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவா் மீண்டும் கைது

பெண் தொழிலதிபரை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தவா், மீண்டும் ஆபாச படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய நிலையில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவையைச் சோ்ந்த 40 ... மேலும் பார்க்க

எழுத்தாளா் வே.முத்துக்குமாருக்கு நாஞ்சில் நாடன் விருது

கோவை, அண்ணா சிலை அருகில் உள்ள ஆருத்ரா ஹாலில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில், ராக் அமைப்பின் நிா்வாகி ஆா்.ரவீந்... மேலும் பார்க்க

ஆன்லைன் மோசடி: கோவையில் கடந்த 7 மாதங்களில் ரூ.68.61 லட்சம் மீட்பு

கோவை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் இணையதள மோசடி மூலம் மக்கள் இழந்த ரூ.93 லட்சம் முடக்கப்பட்டு, ரூ.68.61 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட இணையதள குற்றப் பிரிவு காவல் அதிகாரி கூறிய... மேலும் பார்க்க