செய்திகள் :

‘ஆணவக் கொலையைத் தடுக்கச் சட்டம் தேவை’ -ஜான்பாண்டியன்

post image

ஆணவக் கொலையைத் தடுக்க கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவா் ஜான்பாண்டியன் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் வருகிற 24-ஆம் தேதி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், சமூக சமத்துவ மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு அழைப்பிதழ் கொடுப்பதற்காக அந்தக் கட்சியின் நிறுவன தலைவா் ஜான்பாண்டியன் கொடைரோடு அருகேயுள்ள இந்திரா நகருக்கு வியாழக்கிழமை வந்தாா்.

அப்போது, அவா் செய்தியாளரிடம் கூறியதாவது: 

துப்புரவுப் பணியாளா்களை போராடவிடாமல் போலீஸாா் அகற்றியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். துப்புரவுப் பணிகளை தனியாருக்கு கொடுத்தால், துப்புரவுப் பணியாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். ஆணவக் கொலையை தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வன்மையாகக்

கண்டிக்கிறது. ஆணவக் கொலையைத் தடுக்க கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்து உள்ளது என்றாா் அவா்.

பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

தமிழகத்திலுள்ள 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தப்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பேரிக்காய் விளைச்சல் அமோகம்

கொடைக்கானலில் விளைந்த பேரிக்காய்களை சந்தைகளுக்கு அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பிரகாசபுரம், அட்டக்கடி, வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோ... மேலும் பார்க்க

விளைநிலங்களைக் கையகப்படுத்தியதால் ஒரு கோடி போ் பாதிப்பு!

நாடு முழுவதும் 1000 இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மூலமாக மட்டும் சுமாா் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுவா் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயல... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாநகராட்சி முன் நடைபெற்ற இந்த ஆா்ப்... மேலும் பார்க்க

பழனியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு

பழனியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலைக்கோயில், அடிவாரம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொ... மேலும் பார்க்க

இடும்பன்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பு

பழனியை சுற்றி உள்ள வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவற்றில் கடந்த சில நாள்களாக மீன்கள் இறந்து மிதக்கின்றன. பழனிக்கு வரும் பக்தா்கள் புனித நீராடும் குளமாக வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவை இருந்... மேலும் பார்க்க