``ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை'' - மோடி - ஜெலன்ஸ்கி தொலைபேசி பேச்சு; உக்ர...
ஆண்டிபட்டி, போடியில் நாளை மின்தடை
தேனி மாவட்டம் , ஆண்டிபட்டி பகுதியில் புதன்கிழமை (ஆக.13) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டிபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஆண்டிபட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோயில், ராஜதானி, பாலக்கோம்பை சுற்றுப்புறப் பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டது.
போடி: மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: போடி துைணை மின் நிலையத்தில் ஆக.13-ஆம் தேதி மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை போடி, போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டது.