செய்திகள் :

ஆன்லைனில் திருமணச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? - அமைச்சர் பதில்!

post image

இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா? என்ற திமுக எம்எல்ஏ எழிலன் கேள்விக்கு பேரவையில் அமைச்சர் மூர்த்தி பதிலளித்தார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று கேள்வி நேரத்தின்போது சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ எழிலன், "தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெறுவதில் சார்பதிவாளர் அலுவலங்களிலே சில தடைகள் இருக்கின்றன. குறிப்பாக பட்டியலினத்தவர் சுயமரியாதை திருமணம் செய்துகொள்ளும்போது பல தடைகள் ஏற்படுகின்றன.

மேலும் இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்  பி. மூர்த்தி,

தமிழ்நாட்டில் 2018 முதல் தற்போது வரை 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுயமரியாதை திருமணத்தை பதிவு செய்வது குறித்து அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை பயிற்சி நிலையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

திருமணச் சான்றை பொருத்தவரை, அரசின் இணையதளப் பக்கத்தில் உரிய விவரங்களை நிரப்பி கட்டணம் செலுத்திய பின்னர் விண்ணப்பம் உருவாக்கப்படும். அதன் அச்சுப்பிரதியை எடுத்து திருமணப் பதிவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

பின்னர் திருமணத்தைப் பதிவு செய்வதற்கான நாள், நேரத்தினை முன்பதிவு செய்வதற்கு டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்.

பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்கள் திருத்தம் தேவைப்பட்டால் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு நேரில் வராமல் இணையம் வழியாகவே சரிசெய்து கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.

திருமணச் சான்றுக்கு இணையதளப் பக்கத்தில் விவரங்களை உள்ளீடு செய்து கட்டணம் செலுத்திய பின்னர் நாள், நேரத்திற்கான டோக்கன் பெற்று சரிபார்ப்புக்கு மட்டும் சார்பவதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் இருக்கிறது.

இதையும் படிக்க | 'பாஜகவுக்கு ராகுல் காந்தி உதவுகிறார்' - யோகி ஆதித்யநாத்

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவுமுதல் அமல்!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று(மார்ச் 31) நள்ளிரவு 12 மணிமுதல் சுங்கக் கட்டண உயர்வு அமலாகவுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்.1, செப்.1 ஆகிய தேதிகளில் சுங்கக்கட்டணத்தை மாற்றி அமைப்பது வழ... மேலும் பார்க்க

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க