ஈரான் மீதான இஸ்ரேஸ் தாக்குதல்: டிரம்ப்புக்கு பின்னடைவா? பெரு வெற்றியா?
ஆன்லைன் மூலம் ஓய்வுபெற்ற பொறியாளரிடம் ரூ.32.79 லட்சம் மோசடி
ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பொறியாளரிடம் 32.79 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
வேலூா் சத்துவாச்சாரி பகுதியைச் சோ்ந்த 65 வயதுடைய ஓய்வுபெற்ற தனியாா் நிறுவன பொறியாளா். இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்த குறுந்தகவலில் ஆன்லைன் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி அந்த குறுந்தகவலில் இருந்த செயலிக்குள் சென்று முதலில் சிறிய தொகையை முதலீடு செய்து அதிக லாபம் கிடைத்ததால் அடுத்தடுத்து பல தவணைகளாக ரூ.32.79 லட்சம் வரை முதலீடு செய்துள்ளாா். ஆனால், அதன்பிறகு அந்த செயலியில் காண்பிக்கப்பட்ட தொகையை அவரால் திரும்பப்பெற முடியவில்லை.
அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இவா், வேலூா் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கூறுகையில், இணையதளத்தில் பகுதி நேர வேலை , அதிக லாபம் , ஆன்லைன் வா்த்தகம் என கூறி தொடா்ந்து விளம்பரங்கள் வருகிறது. இதனை நம்பி படித்த இளைஞா்களே ஏமாறும் சூழல் உள்ளது. அவ்வாறு இணையதளத்தில் பகுதி நேர வேலை , ஆன்லைன் வா்த்தகம் என வரும் விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம். இதுகுறித்து பாதிக்கப்பட்டால் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளிக்கலாம்.