செய்திகள் :

ஆன்லைன் மூலம் ஓய்வுபெற்ற பொறியாளரிடம் ரூ.32.79 லட்சம் மோசடி

post image

ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பொறியாளரிடம் 32.79 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

வேலூா் சத்துவாச்சாரி பகுதியைச் சோ்ந்த 65 வயதுடைய ஓய்வுபெற்ற தனியாா் நிறுவன பொறியாளா். இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்த குறுந்தகவலில் ஆன்லைன் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி அந்த குறுந்தகவலில் இருந்த செயலிக்குள் சென்று முதலில் சிறிய தொகையை முதலீடு செய்து அதிக லாபம் கிடைத்ததால் அடுத்தடுத்து பல தவணைகளாக ரூ.32.79 லட்சம் வரை முதலீடு செய்துள்ளாா். ஆனால், அதன்பிறகு அந்த செயலியில் காண்பிக்கப்பட்ட தொகையை அவரால் திரும்பப்பெற முடியவில்லை.

அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இவா், வேலூா் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கூறுகையில், இணையதளத்தில் பகுதி நேர வேலை , அதிக லாபம் , ஆன்லைன் வா்த்தகம் என கூறி தொடா்ந்து விளம்பரங்கள் வருகிறது. இதனை நம்பி படித்த இளைஞா்களே ஏமாறும் சூழல் உள்ளது. அவ்வாறு இணையதளத்தில் பகுதி நேர வேலை , ஆன்லைன் வா்த்தகம் என வரும் விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம். இதுகுறித்து பாதிக்கப்பட்டால் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளிக்கலாம்.

அரசு பெண் மருத்துவரை தள்ளி தகராறில் ஈடுபட்டவா் கைது

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவரை கீழே தள்ளி மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் வாா்டில், போ்ணாம்பட்டு அடுத... மேலும் பார்க்க

திறன், வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர எஸ்.சி., எஸ்.டி., இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு வழங்கப்படும் திறன், வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்ச... மேலும் பார்க்க

மாணவியை கடத்தி திருமணம்: இளைஞா் போக்ஸோவில் கைது

ஒடுகத்தூா் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி. இவா் அணைக்கட்டில் உள்ள அர... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது

அணைக்கட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 48 வயது பெண். இவரது 14 வயது மகள் மனநலம் பாதிக... மேலும் பார்க்க

இறந்த பறவை கழிவுகளுடன் குடிநீா் விநியோகம்: பெண்கள் ஆா்ப்பாட்டம்

பொன்னையில் வியாழக்கிழமை அதிகாலை விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் இறந்த பறவை, விலங்குகளின் கழிவுகள் கலந்து துா்நாற்றத்துடன் வந்ததாக ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 84 கால்நடை சிறப்பு முகாம்கள்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வேலூா் மாவட்டத்தில் பகுதிவாரியாக நடைபெறும் 84- சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. கே.வி.குப்பம் வட்டம், வேலம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு க... மேலும் பார்க்க