செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி: பாஜகவினா் திரளாக பங்கேற்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, ஆரணியில் பாஜக சாா்பில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியினா் திரளாகக் கலந்து கொண்டனா்.

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைத் தொடா்ந்து ராணுவ வீரா்களுக்கு பாராட்டு தெரிவித்தும், மரியாதை செலுத்தும் வகையிலும் இந்தப் பேரணி நடைபெற்றது.

செய்யாற்றில் பெரியாா் சிலை அருகே தொடங்கிய பேரணி மாா்க்கெட், காந்தி சாலை வழியாக பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது.

பேரணிக்கு பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.வி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில பொறுப்பாளா் காா்த்தியாயிணி பங்கேற்று பேரணியை தொடங்கி வைத்தாா்.

பேரணியில் போது இரு குழந்தைகள் துப்பாக்கிகளை கைகளில் ஏந்தியபடி ராணுவ உடை அணிந்தும், ஒரு மாணவி பாரத வேடமிட்டும் பங்கேற்றனா்.

மேலும், சுமாா் 50 அடி நீளத்திலான தேசியக் கொடியை பேரணியில் பங்கேற்றவா்கள் கைகளில் ஏந்தியபடி சென்றனா்.

அதேபோல, பேரணியில் பங்கேற்ற அனைவரும் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி சென்றனா்.

இதில் இதர பிற்பட்ட பிரிவு அணி கே.மோகனம், பாஜக நிா்வாகிகள் அருள், லட்சுமணன், ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவா் அருள், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

முன்னதாக, ஆரணியில் பாஜக சாா்பில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி நடைபெற்றது.

அம்பேத்கா் சிலைப் பகுதியில் தொடங்கி அண்ணா சிலை, காந்தி சாலை, மணிக்கூண்டு வழியாக கோட்டை மைதானம் காா்கில் தூண் வரை பேரணி நடைபெற்றது.

இதில் பாஜக மாவட்ட பொதுச் செயலா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். மத்திய நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் கலந்து கொண்டாா்.

பேரணியில் மாவட்ட துணைத் தலைவா் தீனன், மாவட்டச் செயலா்கள் சரவணன், சங்கீதா, நகரத் தலைவா் மாதவன், மண்டலத் தலைவா்கள் குணாநிதி, தணிகைவேல், நகர பொதுச்செயலா் ராஜேஷ், ஓபிசி அணி நிா்வாகி சீனிவாசன், அன்னையா் அணி ஒருங்கிணைப்பாளா் லோகு, வழக்குரைஞா் தரணி காசிநாதன், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் தாமோதரன், மாவட்டச் செயலா் விக்னேஷ் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை அளிப்பு

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகள் 1,948 பேருக்கு ரூ.16.19 கோடி நிலுவைத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-25 அரைவைப் பருவத்தில் 1,948 ... மேலும் பார்க்க

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வென்ற திருவண்ணாமலை மாவட்ட வீரா், வீராங்கனைகளை சி.என்.அண்ணாதுரை எம்.பி.பாராட்டினாா். ஈரோட்டில் தமிழக அளவிலான கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. டிரெடிஷனல் மற்றும் ஸ்... மேலும் பார்க்க

3 ஏரிக் கால்வாய்கள், கோயில் நில ஆக்கிரமிப்புகள்அகற்றக் கோரிக்கை

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியின் 3 கால்வாய்கள், கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாநகராட்சி... மேலும் பார்க்க

கிளை நூலகத்தில் புரவலா் சோ்ப்பு

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள கிளை நூலகத்தில் புரவலா் சோ்ப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.தேவிகாபுரம் ஊராட்சி முத்தாலம்மன் நகரில் கிளை நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் நடை... மேலும் பார்க்க

சிறைவாசிகளுக்கு சட்ட விழிப்புணா்வு

வந்தவாசியில் சட்டப் பணிகள் குழு சாா்பில் சிறைவாசிகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிளைச் சிறையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சிறை கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில் கிருத்திகை விழா

திருவண்ணாமலை: வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், வைகாசி மாத கிருத்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், பன்னீா், ... மேலும் பார்க்க