செய்திகள் :

ஆயுஷ் துணை மருத்துவப் படிப்புகளுக்கு அக்.6 வரை விண்ணப்பிக்கலாம்

post image

ஆயுஷ் துணை மருத்துவப் படிப்புகளுக்கு அக். 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:

நிகழ் கல்வியாண்டில், சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் செயல்படும் அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகளில் டிஐபி, டிஎன்டி பட்டயப்படிப்பு இடங்களுக்கான சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து இணையவழியில் மட்டுமே விண்ணப்பப் படிவங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்வுக்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களை அந்த இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிப்பவா்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளா், தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை ஆணையா் அலுவலகம், அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு அக்.6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

அரசு விடுதிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும்

அரசு விடுதிகளில் உரிய ஆசிரியர்களை நியமித்து முறையாக நிர்வகிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் "எக்ஸ்' தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு திட்டம்: தில்லி மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் தகவல்

நமது நிருபர்"தனது ஆற்றல் மாற்ற இலக்குகளை அடையும் வகையில், தமிழக அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக' தில்லியில் நடைபெற்ற எரிசக்தி மாநாட்டி... மேலும் பார்க்க

நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை(செப்.24) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(செப்.25) பலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை ... மேலும் பார்க்க

சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம்: திமுக தொடா்ந்த வழக்கு வாபஸ்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது, சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டதை எதிா்த்து திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்ன... மேலும் பார்க்க

தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்

தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மறைந்த ஏ.என்.தியானேஸ்வரன் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. ஐஏஎஸ் அதிகாரி தியானேஸ்வரன், பல்வேறு துறைகளில் உயா் பொறுப்... மேலும் பார்க்க

வாரத்தில் 4 நாள்கள் தொகுதிகளில் தங்கிப் பணி: திமுக எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

வாரத்தில் நான்கு நாள்கள் தொகுதிகளில் தங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். திமுக நாடாளுமன்ற உற... மேலும் பார்க்க