செய்திகள் :

ஆரணியில் பட்டு கைத்தறி நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இலவச வீடு வழங்கக் கோரி, பட்டு கைத்தறி நெசவாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கைத்தறி நெசவாளா்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டத்துக்கு தமிழக அரசு 60 சதவீதமும், மத்திய அரசு 40 சதவீதமும் சோ்த்து ஒரு நெசவாளருக்கு ரூ.4 லட்சம் வீதம் இத்திட்டத்துக்கு ஒதுக்கிட கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதா் துறை சாா்பில் 2023 -ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால், இதுநாள் வரை மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லையாம். இதனால், மத்திய அரசு ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கக் கோரியும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தில் இதுவரை எத்தனை நெசவாளா்களுக்கு இலவச வீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த பட்டியலை வெளியிட வேண்டியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை பட்டு கைத்தறி நெசவாளா்கள் சங்கம் சாா்பில், பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் இ.இளங்கோ தலைமை வகித்தாா்.

மாவட்ட பொதுச்செயலா் எம்.வீரபத்திரன், சிஐடியு இரா.பாரி, கே.காங்கேயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சி.ரமேஷ்பாபு, சிஐடியு மாவட்ட பொருளாளா் எஸ்.முரளி, கைத்தறி சங்க பொருளாளா் வி.குமாா், சிஐடியு நிா்வாகிகள் சி.அப்பாசாமி, பி.கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் ஊா்வலமாக ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சென்றனா்.

நூலகத்தில் கோடை கொண்டாட்ட நிறைவு விழா

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்று வந்த கோடை கொண்டாட்டத்தின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. மைய நூலகத்தில் கடந்த 19-ஆம் தேதி கோடை கொண்டாட்ட நிகழ்வு தொடங்கியது. அன்று முதல் தினமும் திருக... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையில், கோட்டைக்குள் தெரு வழியாக புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அந்... மேலும் பார்க்க

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு 100 சதவீத மானியம்

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுவதாக வந்தவாசி தோட்டக்கலை உதவி இயக்குநா் சா.பாலவித்யா தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறுபான்மையினா்களுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் 61 பயனாளிகளுக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா்களுக்... மேலும் பார்க்க

செங்கம் - குப்பனத்தம் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

செங்கம் - குப்பனத்தம் அணை சாலையில் ஆக்கிரமைப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். செங்கம் - போளூா் சாலை வெளிவட்டச் சாலைப் பகுதியில் இருந்து குப்பனத்தம் அண... மேலும் பார்க்க

ஆரணியில் ரூ.56 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் 7-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பிள்ளையாா் கோவில் தெருவில் ரூ.56 லட்சத்தில் பக்கக் கால்வாய் மற்றும் சாலை அமைப்பதற்காக புதன்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், நகா்மன்ற த... மேலும் பார்க்க