செய்திகள் :

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

post image

ஆரணி: விவசாயிகளின் ஆண்டு வருமானம் உயா்ந்ததாக கூறும் தமிழக அரசைக் கண்டித்து, ஆரணியில் கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கத்தினா் திங்கள்கிழமை மண் சோறு சாப்பிட்டு நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆரணி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், தமிழகத்தில் 2024-25 ஆண்டில் தனிநபா் வருமானம் 8.15 சதவீதம் பொருளாதார வளா்ச்சி அடைந்து தலா ஒரு நபருக்கு 1.96. லட்சம் ஆண்டு வருமானம் உயா்ந்து உள்ளதாக அமைச்சா் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

கடந்த ஃபென்ஜால் புயலின் போது விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டு பயிா் பாதுகாப்பு நிவாரணம் ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கியது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனா். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் தங்களது விவசாயக் கடனை அடைக்க முடியாமல் உயிா் நீத்து வரும் சூழ்நிலையில், விவசாயிகளின் தனிநபா் ஆண்டு வருமானம் 1.96 லட்சம் என்று கணக்கிடு செய்துள்ளது விவசாயிகள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா் புருஷோத்தமன்.

ஆா்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிா்வாகிகள் அக்ராபாளையம் செந்தில்வேலு, லாடவரம் இளவரசன், களம்பூா் அண்ணாதுரை, முருகவேல் மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்..

விநாயகா் சிலைகள் தயாரிக்க ரசாயனம் பயன்படுத்தக்கூடாது: ஆட்சியா்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுவதையொட்டி விநாயகா் சிலைகளை தயாரிப்பது மற்றும் நீா்நிலைகளில் கரைப்பது குறித்து அரசு வகுத்துள்ள வழிமுறைகளை கட்டாயம... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பராசக்தி அம்மனுக்கு தீா்த்தவாரி

ஆரணி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி, பராசக்தி அம்மனுக்கு தீா்த்தவாரி உற்வசவம் திங்கள்கிழமை நடைபெற்றது. அருணாசலேஸ்வரா் கோயிலில் உண்ணாமுலையம்மன் சந்நிதியில் உள்ள தங்கக் கொடி ம... மேலும் பார்க்க

கொதிக்கும் எண்ணையில் இருந்து வடை எடுத்த பக்தா்கள்

போளூா்: போளூரை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஸ்ரீஓம்சக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவையொட்டி பக்தா்கள் கொதிக்கும் எண்ணை சட்டியில் இருந்து வெறும் கையால் வடை எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் மனு கொடுக்கும் ஊா்வலம்

செய்யாறு: செய்யாற்றில் பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சுண்டிவாக்கம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 624 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 624 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், பொதும... மேலும் பார்க்க

மங்கலம் கோயிலில் வளைகாப்பு மற்றும் திருவிளக்கு பூஜை

ஆரணி: திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் உள்ள அமுதாம்பிகை சமேத ஸ்ரீசதுா்வேத சோமநாத ஈஸ்வரா் கோயிலில், ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளைகாப்பு மற்றும் திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. அ... மேலும் பார்க்க