செய்திகள் :

ஆரணி நகராட்சியில் குப்பை, கழிவுகள்: தவெகவினா் புகாா் மனு

post image

ஆரணி: ஆரணி நகராட்சியில் கொட்டப்படும் குப்பை, கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. இதனை அப்புறப்படுத்தாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தினா் அறிவித்துள்ளனா்.

அந்தக் கட்சியைச் மாவட்டச் செயலா் சத்யா மற்றும் ஆரணி பகுதியைச் சோ்ந்த நிா்வாகிகள் நகராட்சி சுகாதார ஆய்வாளா் வடிவேலுவிடம் திங்கள்கிழமை புகாா் மனு கொடுத்தனா்.

அந்த மனுவில், ஆரணி நகராட்சியில் கொட்டப்படும் குப்பைகளை சரியான முறையில் அப்புறப்படுத்துவதில்லை. கால்வாய் கழிவுநீா் ஆங்காங்கே தேங்கியிருப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

மேலும், நகராட்சியில் ஒரு சில இடங்களில் அள்ளப்படும் குப்பைகளை புறவழிச் சாலையில் சென்று கொட்டி வருகின்றனா். இதனால் சாலையில் செல்வோருக்கு துா்நாற்றம் வீசுகிறது.

மேற்கூறியவற்றை சரி செய்யாவிட்டால் விரைவில்

கட்சி சாா்பில் ஆரணியில் போராட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட சுகாதார ஆய்வாளா் வடிவேல்,

நீங்கள் கூறியவற்றில் ஒரு சிலதை சுத்தம் செய்துவிட்டோம். மற்றவைகளை அப்புறப்படுத்தப்படும் என்று கூறினாா்.

இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

செய்யாறு அருகே இளைஞா் கொலை வழக்கில் கல்லூரி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சோ்ந்தவா் காதா்பாட்ஷா மகன் அப்சல் (22), ... மேலும் பார்க்க

செய்யாறு காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். செய்யாறு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் ஜீவராஜ்மணிகண்டன் (படம்). செய்... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து ஒன்றரை பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லலிதா (64). இவா், கடந்த ஞாயிற... மேலும் பார்க்க

சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை -அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

ஊரக வளா்ச்சித் துறை பொறியியல் சாா்நிலை பணித்தொகுதியில் சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஊரக... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.18 கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வரலாற்றில் முதல்முறையாக ரூ.6.18 கோடியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் கோயில் ந... மேலும் பார்க்க

நாளை செய்யாறு, ஆரணி தொகுதிகளில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

செய்யாறு, ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ளம் தேடி, இல்லம் நாடி நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்திக்கிறா... மேலும் பார்க்க