செய்திகள் :

ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட ஊடகவியலாளர்; கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கும் மனைவி - காரணம் என்ன?

post image

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் பிரதாப். ஊடகவியலாளரான இவர் கடந்த 19-ம் தேதி திடீரென காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ராஜீவ் பிரதாப்பின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்தது.

இந்த நிலையில், ஜோஷியாரா தடுப்பணையில் ஊடகவியலாளரின் கார் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கங்கோரி அருகே உள்ள பாகீரதி ஆற்றில் ஊடகவியலாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஊடகவியலாளரின் மனைவி முஸ்கன்
ஊடகவியலாளரின் மனைவி முஸ்கன்

இதற்கிடையில் ஊடகவியலாளரின் மனைவி முஸ்கன், ஊடகங்களிடம் பேசினார். அப்போது, ``என் கணவர் காணாமல் போன அன்று இரவு 11 மணியளவில் அவருடன் பேசினேன். அதன் பிறகுதான் அவர் காணாமல் போயிருக்கிறார்.

சமீபத்தில் உத்தரகாசி மாவட்ட மருத்துவமனை மற்றும் பள்ளி பற்றிய தனது புலனாய்வு குறித்து தன் யூடியூப் சேனலான டெல்லி உத்தரகாண்ட் லைவ்வில் பதிவேற்றியிருந்தார்.

அதற்குப் பிறகு மிகவும் கவலையாக இருப்பதாக என்னிடம் கூறினார். வீடியோக்களை நீக்காவிட்டால் பலர் தன்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டுவதாகக் கூறினார்.

அதற்குப் பிறகு இரவு 11.50-க்கு, அவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு செய்தியை அனுப்பினேன். அது டெலிவரி ஆகவே இல்லை. அவர் தவறுதலாக அணையில் விழவில்லை. அது விபத்தல்ல" எனக் குறிப்பிட்டார்.

இது தொடர்பான வழக்குபதிவு செய்து விசாரித்துவரும் காவல்துறை, ``பிரேத பரிசோதனைக்குப் பிறகே இது கொலையா? விபத்தா என்பது தெரியவரும். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என்றார்.

கோத்தகிரி: தலையில் காயம்,தேயிலைத் தோட்டத்தில் மர்மாக கிடந்த வடமாநில பெண்ணின் சடலம்; விசாரணை தீவிரம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான வடமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேயிலை தோட்டங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான வடமாநில தொழில... மேலும் பார்க்க

``இனிமே இங்க வந்தா கொன்னுடுவோம்" - ஆம்புலன்ஸ் டிரைவரின் புகார் - FIR சொல்வது என்ன?

தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானது ஆ... மேலும் பார்க்க

சிக்கன் கேட்டதால் அடி; 7 வயது மகன் உயிரிழப்பு - தாய் கைது

மும்பை அருகில் உள்ள பால்கர் காசிபாடாவில் வசிப்பவர் பல்லவி. இவருக்கு 7 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவரது 7 வயது மகன் வீட்டில் சிக்கன் குழம்பு வைக்... மேலும் பார்க்க

சென்னை: காதல் ஜோடியை மிரட்டிய கும்பல் - ஆன்லைன் மூலம் பணத்தை பறித்ததால் சிக்கிய பின்னணி!

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், படப்பையை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று மணிமங்கலம் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்து ப... மேலும் பார்க்க

`காதலிக்க மறுத்த ராணுவ வீரரின் காதலி மீது ஆசிட் வீச்சு' - சோசியல் மீடியா காதலனை ஏவிய பெண்

ஆசிட் வீசிய பெண்உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் இருக்கும் திக்ரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுகுனா(22) என்ற ஆசிரியை பள்ளிக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந... மேலும் பார்க்க

மதுரை: கழிவறை ஜன்னல் வழியாக பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது

கழிவறையில் மொபைல் போன் வைத்து சக பெண் ஊழியர்களை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆபாச வீடியோமதுரை மாவட்டத்திலுள்ள மின்வாரிய அ... மேலும் பார்க்க