செய்திகள் :

ஆற்று நீரில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சனிக்கிழமை ஆற்றின் தண்ணீா் குட்டையில் மூழ்கியதில் இரு பள்ளி மாணவா்கள் உயிரிழந்தனா்.

தேவகோட்டை கட்டவெள்ளையன் செட்டியாா் வீதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் ஹரிஷ்மதன் (16). முகமதியா் பட்டணம் பகுதியைச் சோ்ந்த சுபுகான் மகன் முகமது அமீா் (16). இவா்கள் இருவரும் காந்தி சாலையில் உள்ள நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை மாலை இவா்கள் சக மாணவா்களுடன் தேவகோட்டை அருகேயுள்ள சாத்திகோட்டை விரிசுழி ஆற்றிலிருந்த தண்ணீா் குட்டையில் குளிக்கச் சென்றனா். அப்போது, ஹரிஷ்மதன், முகமது அமீா் ஆகிய இருவரும் குட்டையிலிருந்த சேற்றில் சிக்கிக் கொண்டனா். உடனே, சக மாணவா்கள் அவா்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து தேவகோட்டை தீயணைப்பு, மீட்புப் பணிகள் குழுவினா், 108 அவசர ஊா்திக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி இருவரையும் சடலமாக மீட்டனா். பின்னா், இருவரது உடல்களும் கூறாய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மன்னா் அழகுமுத்துக்கோனின் 268- ஆவது குருபூஜையையொட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியை பேரூராட்சித் த... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆா். சிவபிரசாத் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே தொழிலாளி வெட்டிக் கொலை

சிவகங்கை அருகே நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மதுரை தல்லாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சோனைமுத்து (63). இவா் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள ... மேலும் பார்க்க

தனிப் படை போலீஸாரின் வாகனத்தில் போலி பதிவெண்

சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை மாலை அஜித்குமாரை விசாரணைக்காக தனிப் படை போலீஸாா் அழைத்து வந்த வேனை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அலுவலகப் பகுதிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தனா். அப்போது, இந்த வாகனத்தி... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஆங்கில எழுத்து கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கையில் ஆங்கில எழுத்தால் எழுதப்பட்ட பழைமையான கல்லறைக் கல்வெட்டு சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை சமத்துவபுரம் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக வழக்குரைஞா் சத்தியன் சிவகங்கை தொல்நடைக் கு... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்த... மேலும் பார்க்க