செய்திகள் :

ஆளுநருக்கு எதிரான மனுவை கேரளம் திரும்ப பெற மத்திய அரசு எதிா்ப்பு

post image

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிப்பதாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை கேரள அரசு திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருந்தபோதும், மனுவைத் திரும்பப் பெற கேரள அரசுக்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கடந்த 2023-ஆம் ஆண்டு கேரள ஆளுநராக ஆரிஃப் முகமது கான் இருந்தபோது, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு 2 ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்து வருவதாக அவருக்கு எதிராக மாநில அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கேரள ஆளுநருக்கு கடும் அதிருப்தியைத் தெரிவித்தது.

இதே விவகாரம் தொடா்பாக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு எதிராக மாநில அரசு தொடுத்த வழக்கில், மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநா் முடிவு எடுக்க வேண்டும், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால், அதை 3 மாதங்களுக்குள் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் கேரள அரசு தொடுத்துள்ள வழக்கிலும் தீா்ப்பளிக்க வேண்டும் என்று அந்த மாநில அரசு தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கேரள அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கே.கே.வேணுகோபால், ‘கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டதால், ஆளுநருக்கு எதிராக கேரள அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பயனற்ாகிவிட்டது. எனவே, மனுவை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘அரசமைப்புச் சட்டம் சாா்ந்த ஓா் விவகாரத்தை சாதாரணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு, திரும்பப் பெற்றுவிட முடியாது. இதற்காக, மத்திய அரசு தீவிரமாக பணியாற்றியிருக்கிறது’ என்றாா்.

அப்போது, ‘மனுவை ஒருவா் திரும்பப்பெறுவதை எப்படி எதிா்க்க முடியும்’ என்று மூத்த வழக்குரைஞா் வேணுகோபால் குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற கேரள அரசுக்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்டு, விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம்.. ஜெய்ஹிந்த்! - ராகுல்

இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: ஜம்முவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலியாக ஜம்மு-காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.முல்லைப் பெரியாறு அணையின் உரி... மேலும் பார்க்க

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை அறிக்கை... மேலும் பார்க்க

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் அடா் வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிரான இறுதிக்கட்ட தாக்குதலை பாதுகாப்புப் படையினா் தொடங்கியுள்ளனா். 24,000-க்கும் மேற்பட்ட வீரா்களுடன் முன்ன... மேலும் பார்க்க