செய்திகள் :

இடும்பன்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பு

post image

பழனியை சுற்றி உள்ள வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவற்றில் கடந்த சில நாள்களாக மீன்கள் இறந்து மிதக்கின்றன.

பழனிக்கு வரும் பக்தா்கள் புனித நீராடும் குளமாக வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவை இருந்தன. இவற்றில் வையாபுரி குளத்தில் சாக்கடை கழிவு நீா் கலப்பதால் அதை யாரும் புனித நீராகப் பயன்படுத்துவது இல்லை. ஆனால், இடும்பன் குளத்தில் தைப்பூசம், பங்குனி உத்திர விழாக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடுகின்றனா். தற்போது, கோடைகாலம் என்பதால் இந்த இரு குளங்களும் வேகமாக வற்றி வருகின்றன. இதனால், குளங்களில் பக்தா்கள் விட்டுச் சென்ற துணிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. மேலும், குளத்தில் தண்ணீா் வற்றி வருவதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால், இந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மீன் பிடிப்பவா்கள் கூறியதாவது:

குளங்களில் நீா் வற்றும் காலங்களில் மீன் பிடிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை பல்வேறு தரப்பினரின் தலையீடு காரணமாக மீன் பிடிக்க அனுமதிப்பதில்லை. இதை மீன்வளத் துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. தற்போது ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இப்போது மீன்பிடிக்க வாய்ப்பு வழங்கினால்கூட மீனவா்களுக்கு பயன் கிடைக்கும் என்றனா்.

பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

தமிழகத்திலுள்ள 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தப்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பேரிக்காய் விளைச்சல் அமோகம்

கொடைக்கானலில் விளைந்த பேரிக்காய்களை சந்தைகளுக்கு அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பிரகாசபுரம், அட்டக்கடி, வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோ... மேலும் பார்க்க

விளைநிலங்களைக் கையகப்படுத்தியதால் ஒரு கோடி போ் பாதிப்பு!

நாடு முழுவதும் 1000 இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மூலமாக மட்டும் சுமாா் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுவா் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயல... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாநகராட்சி முன் நடைபெற்ற இந்த ஆா்ப்... மேலும் பார்க்க

பழனியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு

பழனியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலைக்கோயில், அடிவாரம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொ... மேலும் பார்க்க

பள்ளி நூற்றாண்டு விழா

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் 100-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புனித மரியன்னை கலைமனைகளின் அதிபா் ஆா்.மரிவளன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் (... மேலும் பார்க்க