செய்திகள் :

இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கே.எல்.ராகுல்தான் எனது முதல் தெரிவு: கெவின் பீட்டர்சன்

post image

இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு எனது முதல் தெரிவு கே.எல்.ராகுல்தான் என தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், தற்போது தில்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

இதையும் படிக்க: டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப்பின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறார்கள்: விராட் கோலி

என்ன சொல்கிறார் கெவின் பீட்டர்சன்?

நடப்பு ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், டி20 போட்டிகளில் கே.எல்.ராகுலை 4-வது வீரராக களமிறக்க வேண்டும் எனவும், விக்கெட் கீப்பருக்கு அவரே தனது முதல் தெரிவு எனவும் தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 போட்டிகளில் இந்திய அணி கே.எல்.ராகுலை 4-வது வீரராக களமிறக்க வேண்டும் எனக் கூறுவேன். இந்திய அணியில் எண்ணற்ற தொடக்க ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால், கே.எல்.ராகுல் விளையாடும் விதத்தினைப் பார்க்கும்போது, அவர் இந்திய அணியில் 4-வது வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் விளையாட வேண்டும் என்பதே எனது முதல் தெரிவாக இருக்கும்.

கடந்த ஆண்டின் மத்தியிலிருந்து கே.எல்.ராகுல் மிகவும் நேர்மறையாக விளையாடி வருகிறார். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக அவர் எப்படி விளையாடினார் என்பதை நாம் பார்த்தோம். அவர் மிகவும் அற்புதமாக விளையாடினார் என்றார்.

இதையும் படிக்க: இவர்கள் மூவரும் இங்கிலாந்துக்கு சவாலளிப்பார்கள்; ரவி சாஸ்திரி கூறுவதென்ன?

கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை.

தற்போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கான போட்டியில் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், துருவ் ஜுரெல் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்: முதல் சதம் விளாசினார் 14 வயது இளம் வீரர்!

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசிய சாதனை படைத்தார். அவர் 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 சிக்ஸர்கள் அடங்கும்.ராஜஸ்தான்... மேலும் பார்க்க

ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அரைசதம்: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 210 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ர... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அறிமுக வீரராக களமிறங்கும் ஆப்கன் ஆல்ரவுண்டர்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்... மேலும் பார்க்க

டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப்பின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறார்கள்: விராட் கோலி

டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப்பின் முக்கியத்துவம் மறந்துவிடப்படுவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேப... மேலும் பார்க்க

ரிஷப் பந்துக்கு ரூ. 24 லட்சம் அபராதம்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைப... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் வரலாற்றுச் சாதனை!

லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.மும்பை வான்கடே மைதானத்தில் லக்னெள அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன... மேலும் பார்க்க