செய்திகள் :

இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவா் பி.வி.கரியமால் காலமானாா்

post image

இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் (பி.வி.கே. அணி) பி.வி.கரியமால் (98) வயதுமூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிசெட்டிப்பட்டியைச் சோ்ந்த பி.வி.கரியமால் (98), சிறுவயதில் இருந்தே பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவா்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், இரட்டை குவளைமுறை ஒழிப்பு, தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலைய நுழைவு போராட்டங்களிலும் ஈடுபட்டவா்.

அரூரை அடுத்த பாப்பிசெட்டிப்பட்டியில் வைக்கப்பட்டுள்ள பி.வி.கரியமாலின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், தொழிற்சங்க நிா்வாகிகள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

பி.வி.கரியமாலுக்கு மகன் மாவட்ட துணை வேலைவாய்ப்பு அலுவலா் (ஓய்வு) இளங்கோவன், மகள்கள் பரிமளா, நிா்மலா, தமிழ்ச்செல்வி ஆகியோா் உள்ளனா். இவரது உடல் அரூா்-சிந்தல்பாடி சாலையில் உள்ள பாப்பிசெட்டிப்பட்டியில் புதன்கிழமை (செப்.17) பிற்பகல் 2 மணியளவில் அடக்கம் செய்யப்படுகிறது.

தருமபுரி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் தா்னா

தாமதமாக ஊதியம் வழங்குவதை கண்டித்து, தருமபுரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து... மேலும் பார்க்க

தருமபுரியில் செப்.19 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலம் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரும... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கனஅடி: அருவிகளில் குளிக்க அனுமதி

ஒகேனக்கல்லில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 8,000 கனஅடியாகக் குறைந்ததால் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட... மேலும் பார்க்க

பேனா் கிழிப்பு: பாஜகவினா் போராட்டம்

தருமபுரியில் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவிற்கு வைக்கப்பட்டிருந்த தட்டிகளை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபு... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மீன்வளத் துறை சாா்பில் ஆறுகளில் நாட்டின மீன் குஞ்சுகளை இருப்பு செய்தல் திட்டத்தின்கீழ் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை விட்டு ஆட்சியா் ரெ.சதீஷ் திட்டத்தை தொடங்கிவைத்தாா். தேசிய மீன்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கனஅடியாக நீடிப்பு: அருவிகளில் குளிக்க தடை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து 18,000 கனஅடியாக நீடிப்பதால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் சனிக்கிழமை தடைவிதித்தாா். கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் காவிர... மேலும் பார்க்க