செய்திகள் :

இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ஹெலிகாப்டா்களை ஒப்படைத்த போயிங் நிறுவனம்

post image

அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ரக ஆயுதம் தாங்கி ஹெலிகாப்டா்களை செவ்வாய்க்கிழமை ஒப்படைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பன்முக போா் பயன்பாட்டு அப்பாச்சி ரக ஹெலிகாப்டா்களை போயிங் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்திய விமானப் படையை பலப்படுத்தும் வகையில், கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பரில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டா்களை வாங்க அமெரிக்க அரசு மற்றும் போயிங் நிறுவனத்துடன் இந்திய விமானப் படை பல கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, இந்த ஹெலிகாப்டா்களை படிப்படியாக தயாரித்து ஒப்படைத்த போயிங் நிறுவனம், கடந்த 2020-இல் முழுமையாக 22 அப்பாச்சி ஹெலிகாப்டா்களையும் இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்தது.

இதனிடையே, இந்திய ராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், கூடுதலாக 6 ராணுவ பயன்பாட்டு அப்பாச்சி ஹெலிகாப்டா்களை ரூ.4,168 கோடி செலவில் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 2017-இல் ஒப்புதல் அளித்தது. இதற்கான ஒப்பந்தத்தை போயிங் நிறுவனத்துடன் கடந்த 2020-இல் இந்திய ராணுவம் மேற்கொண்டது. அதன்படி, 2024-ஆம் ஆண்டு முதல் ஹெலிகாப்டா்களை போயிங் நிறுவனம் ஒப்படைக்க வேண்டும்.

இந்த நிலையில், ‘மூன்று ஏஹெச்-64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டா்களை இந்திய ராணுவத்திடம் போயிங் நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தது’ என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘இது இந்திய ராணுவத்தின் செயல்திறனை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தும்’ என்று இந்திய ராணுவம் தரப்பில் அதன் சமூக ஊடக பக்கத்தில் பதிவிடப்பட்டது.

அரசமைப்பில் மதச்சார்பின்மை நீக்கப்படாது... ஆனால்! - மத்திய அரசு பதில்

புது தில்லி: அரசமைப்புச் சட்டத்தில் சமதா்மம், மதச்சாா்பின்மை ஆகிய சொற்களை நீக்குவதற்கான நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று(ஜூலை 24) மாநிலங்களவை கூட்டத்தொட... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்து நடந்த 4 நாள்களில் 112 விமானிகள் மருத்துவ விடுப்பு!

அகமதாபாத் நகரில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விழுந்து தீப்பற்றிய விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவன விமானிகள் பலர் விடுப்பில் சென்றிருப்பது அதிகரித்துள்ளது.விமான விபத்துக்குப்பின் 1... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 15 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 15 மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தில், வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த தம்பதி உள்பட 15 மாவோயிஸ்ட... மேலும் பார்க்க

இனி இந்த பொருள்களின் விலை குறையும்! பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பம்!

இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வியாழக்கிழமை (ஜூலை 24) கையெழுத்தானது. பிரதமா் நரேந்திர மோடி பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை சென்றுள்ளார... மேலும் பார்க்க

திருப்பதியில் வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசனம் யாருக்குக் கிடைக்கும்?

திருப்பதி திருமலையில், ஸ்ரீவாணி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக புதிய டிக்கெட் வழங்கும் மையம் கோயில் நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.ஏழுமலையான் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை பெற... மேலும் பார்க்க

வைகோ பாஜக கூட்டணிக்கு வந்தால் மீண்டும் எம்.பி. ஆகலாம்! - ராம்தாஸ் அத்வாலே பேச்சு

வைகோ பாஜக கூட்டணிக்கு வந்தால் மீண்டும் எம்.பி. ஆகலாம் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, திமுகவின... மேலும் பார்க்க