செய்திகள் :

ஏர் இந்தியா விபத்து நடந்த 4 நாள்களில் 112 விமானிகள் மருத்துவ விடுப்பு!

post image

அகமதாபாத் நகரில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விழுந்து தீப்பற்றிய விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவன விமானிகள் பலர் விடுப்பில் சென்றிருப்பது அதிகரித்துள்ளது.

விமான விபத்துக்குப்பின் 112 விமானிகள் விடுப்பில் விடுமுறை எடுத்துள்ளனர். அவர்களுள் பெரும்பாலானோர் உடல்நிலை சரியில்லை என்பதையே காரணமாகச் சுட்டிக்காட்டி மருத்துவ விடுப்பு எடுத்துள்ளனர். இந்த தகவலை இன்று(ஜூலை 24) மக்களவை கூட்டத்தொடர் கேள்வி நேரத்தின்போது சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளீதர் மோஹோல் தெரிவித்தார்.

ஜூன் 16, 2025-இல் மொத்தம் 112 விமானிகள்(51 கமாண்டர்கள், 61 முதல்நிலை அதிகாரிகள்) மருத்துவ விடுப்பு எடுத்துள்ளனர்.

மேலும், இந்தியாவில் இயக்கப்படும் விமான நிறுவனங்களில் குறிப்பாக 5 விமான நிறுவனங்கள் நிகழாண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் 183 முறை தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் 85, இண்டிகோ விமானங்களில் 62, ஆகாஷா ஏர் விமானங்களில் 28, ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் 8 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

விழி படலத்தை மாற்றாமல் பாா்வையை மீட்கும் மருத்துவ நுட்பம்: டாக்டா் அமா் அகா்வால் கண்டுபிடிப்பு

விழி வெண்படலம் (காா்னியா) சேதமடைந்தால் அதை மாற்றாமல் அதற்கு பதிலாக பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி (பிபிபி) சிகிச்சை மூலம் பாா்வையை மீட்கும் நுட்பத்தை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா... மேலும் பார்க்க

துல்லியத் தாக்குதல் நடத்த உதவும் ரேடாா்கள் கொள்முதல்: ரூ.2,000 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்

இலக்குகளைக் குறிவைத்து துல்லியத் தாக்குதல் நடத்த தகவல்களை பரிமாற்றம் செய்யும் வான் பாதுகாப்பு ரேடாா்களை கொள்முதல் செய்வதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

இந்தியா - நியூசிலாந்து இடையில் 3-ம் சுற்று வர்த்தக பேச்சு! எப்போ?

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-ம் சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இருநாடுகளுக்கு, இடையி... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறக்கம்!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது.ஜெய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவின் ஏஐ612 விமான... மேலும் பார்க்க

இந்தியாவில் யானை தாக்குதல்: 2,800க்கும் மேற்பட்டோர் பலி

2019 முதல் 2023 வரை இந்தியாவில் யானை தாக்குதல்களால் 2,800க்கும் மேற்பட்டோர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் எம்.பி. ஜான் பிரிட்டாஸின் கேள்விக்கு பதிலளித்த சுற்றுச்சூ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் தேடப்பட்டு வந்த 4 நக்சல்கள் கைது!

சத்தீஸ்கர் மாநிலத்தில், வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்ற 4 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுக்மா மாவட்டத்தில், கடந்த ஜூன் 29 ஆம் தேதி, பாதுகாப்புப் படையினரின் முகாம் அருகி... மேலும் பார்க்க