செய்திகள் :

சத்தீஸ்கரில் 15 மாவோயிஸ்டுகள் சரண்!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தில் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 15 மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

தண்டேவாடா மாவட்டத்தில், வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த தம்பதி உள்பட 15 மாவோயிஸ்டுகள், மாநில காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகள் முன்னிலையில் இன்று (ஜூலை 24) சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த 15 பேரில், ரூ. 8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட புத்ராம் (எ) லாலு குஹாராம், ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட அவரது மனைவி காம்லி (எ) மோடி பொடாவி, ரூ.2 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பொஜ்ஜா மத்காம் உள்பட முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதில், தம்பதியான புத்ராம் மற்றும் காம்லி ஆகியோர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து ஏராளமான தாக்குதல்கள் நடத்தி வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையடுத்து, சரணடைந்த மாவோயிஸ்டுகள் 15 பேரின் மறுவாழ்வுக்கு அரசுத் திட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

முன்னதாக, பஸ்தார் மாகாணங்களில், பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டு நடவடிக்கைகளுக்கு எதிரான லொன் வர்ராட்டு மற்றும் புனா மார்கெம் எனும் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தற்போது வரை பஸ்தார் பகுதியில் செயல்பட்டு வந்த 1,020 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இனி இந்த பொருள்களின் விலை குறையும்! பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பம்!

விழி படலத்தை மாற்றாமல் பாா்வையை மீட்கும் மருத்துவ நுட்பம்: டாக்டா் அமா் அகா்வால் கண்டுபிடிப்பு

விழி வெண்படலம் (காா்னியா) சேதமடைந்தால் அதை மாற்றாமல் அதற்கு பதிலாக பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி (பிபிபி) சிகிச்சை மூலம் பாா்வையை மீட்கும் நுட்பத்தை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா... மேலும் பார்க்க

துல்லியத் தாக்குதல் நடத்த உதவும் ரேடாா்கள் கொள்முதல்: ரூ.2,000 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்

இலக்குகளைக் குறிவைத்து துல்லியத் தாக்குதல் நடத்த தகவல்களை பரிமாற்றம் செய்யும் வான் பாதுகாப்பு ரேடாா்களை கொள்முதல் செய்வதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

இந்தியா - நியூசிலாந்து இடையில் 3-ம் சுற்று வர்த்தக பேச்சு! எப்போ?

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-ம் சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இருநாடுகளுக்கு, இடையி... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறக்கம்!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது.ஜெய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவின் ஏஐ612 விமான... மேலும் பார்க்க

இந்தியாவில் யானை தாக்குதல்: 2,800க்கும் மேற்பட்டோர் பலி

2019 முதல் 2023 வரை இந்தியாவில் யானை தாக்குதல்களால் 2,800க்கும் மேற்பட்டோர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் எம்.பி. ஜான் பிரிட்டாஸின் கேள்விக்கு பதிலளித்த சுற்றுச்சூ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் தேடப்பட்டு வந்த 4 நக்சல்கள் கைது!

சத்தீஸ்கர் மாநிலத்தில், வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்ற 4 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுக்மா மாவட்டத்தில், கடந்த ஜூன் 29 ஆம் தேதி, பாதுகாப்புப் படையினரின் முகாம் அருகி... மேலும் பார்க்க