செய்திகள் :

இந்திய ராணுவ அதிகாரிகள் குறித்த போலியான செய்திகளை வெளியிடும் பாகிஸ்தான் ஊடகங்கள்!

post image

இந்திய ராணுவ அதிகாரிகளைப் பற்றிய போலியான செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளதாகக் கூறப்படும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நாளுக்குநாள் விரிசலடைந்து போர்ப் பதற்றம் நிலவி வருகின்றது.

இந்நிலையில், இந்தியாவின் முக்கிய ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்து அவர்களைப் பற்றிய போலியான செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் பரப்பி வருகின்றன.

இந்திய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குநரான துணைநிலை ஜெனரல் டி.எஸ். ரானா பதவி நீக்கம் செய்யப்பட்டு அந்தமான் நிகோபாரிலுள்ள காலாபானி சிறைச்சாலைக்கு நாடுகடத்தப்பட்டதாகக் கூறி பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகளைப் பரப்பியுள்ளன.

ஆனால், ராணுவ அதிகாரியான டி.எஸ்.ரானா அந்தமான் நிகோபாரின் முப்படைப் பிரிவின் தலைமைத் தளபதியாகப் பதவி உயர்வுப் பெற்றுள்ளார்.

இதேபோல், பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களினால் ராணுவ உயர் அதிகாரியான எம்.வி.சுசீந்திர குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக ஊடகங்கள் செய்திகளைப் பரப்பின.

ஆனால், சுமார் 40 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றிய அவர் கடந்த ஏப்.30 ஆம் தேதியன்று தனது ராணுவப் பணியிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ளார்.

இத்துடன், பாகிஸ்தான் மீது போர்த் தாக்குதல் நடத்த மறுத்ததினால், விமானப்படை துணைத் தலைவர், ஏர் மார்ஷல் எஸ்.பி. தர்கர் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறி அந்நாட்டைச் சேர்ந்த சில சமூக ஊடகக் கணக்குகளில் போலியான செய்திகள் வெளியாகின.

ஆனால், அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ஏர் மார்ஷல் எஸ்.பி.தர்கர் கடந்த ஏப்.30 ஆம் தேதியன்று ஓய்வுப் பெற்றார்.

இத்தகைய, போலியான செய்திகள் அனைத்தும் இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்படுகின்றன. ஏனெனில், இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழலைச் சமாளிக்க இந்தியா தயாராக இல்லை எனும் பிம்பத்தை உருவாக்கவே இவ்வாறு பாகிஸ்தான் ஊடகங்கள் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களின் சமூக வலைதளப் பக்கங்களும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தானுடன் போர் தீர்வல்ல: நடிகை திவ்யா

இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம்: அமெரிக்கா அறிவுறுத்தல்!

தாக்குதல் நடக்கும் இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க மக்களுக்கு அந்த நாட்டு வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு பத... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை!

பஹல்காம் தாக்குதலையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இருப... மேலும் பார்க்க

ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆலோசனை

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அப்போது பிராந்திய பாதுகாப்பு குறித்து அவரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனா். பஹல்காம் பயங்க... மேலும் பார்க்க

இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

இந்தியாவுடன் மோதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் ஜூலை 1-ஆம் தேதி ... மேலும் பார்க்க

இஸ்ரேலுடன் பேச்சுவாா்த்தை அா்த்தமற்றது: ஹமாஸ்

காஸா மீது இஸ்ரேல் ‘பட்டினித் தாக்குதல்’ நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவது அா்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் முக்கிய ... மேலும் பார்க்க