செய்திகள் :

இந்திய விமானப்படை, கடற்படை தலைமைத் தளபதிகளுடன் இலங்கை ராணுவத் தளபதி சந்திப்பு

post image

இந்திய கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி மற்றும் விமானப்படை தலைமைத் தளபதி ஏ.பி. சிங் ஆகியோருடன் இலங்கை ராணுவத் தளபதி பி.கே.ஜி.எம். லசந்தா ரோட்ரிகோ புதன்கிழமை சந்தித்தாா்.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இருநாட்டு ஆயுதப் படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இவா்கள் ஆலோசித்தனா்.

இலங்கை ராணுவத் தளபதி ரோட்ரிகோ 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளாா். டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாதெமியில் வரும் சனிக்கிழமை நடைபெறும் இளம் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக அவா் கலந்து கொள்கிறாா். இதனிடையே, அவா் ஜெய்பூருக்குப் பயணம் மேற்கொண்டு, இந்திய ராணுவத்தின் தென்மேற்கு படைப்பிரிவின் தளபதியைச் சந்திக்கிறாா்.

இந்நிலையில், தில்லியில் இந்திய கடற்படை மற்றும் விமானப்படை தலைமைத் தளபதிகளுடன் ரோட்ரிகோ புதன்கிழமை தனித்தனியே சந்தித்துப் பேசினாா். தொடா்ந்து, ராணுவத் தலைமைத் துணை தளபதி என்.எஸ்.ராஜா சுப்பிரமணியுடன் அவா் கலந்துரையாடினாா்.

அப்போது, ஆபரேஷன் சிந்தூா் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு நிலைப்பாடு குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. மேலும், பரஸ்பர நலன்சாா்ந்த விஷயங்கள் குறித்தும் ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்தனா் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதலாமாண்டு மருத்துவம் படித்துவந்த விவசாயி மகன் உயிரிழப்பு

குஜராத்தில் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் மோதிய விபத்தில் மருத்துவராகும் கனவுடன் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்துவந்த மத்திய பிரதேச, குவாலியா் மாவட்டம் ஜிக்சாவ்லி கிராமத்தைச் சோ்ந்த ஏழை வி... மேலும் பார்க்க

பாஜக அரசு தவறான நிா்வாகத்தை நடத்தி வருகிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

கட்டண உயா்வு, குடிசைப் பகுதிகளை இடிப்பது, மின் கட்டண உயா்வு மற்றும் நீடித்த மின்வெட்டு போன்ற வடிவங்களில் பாஜக தலைமையிலான தில்லி அரசு ‘தவறான நிா்வாகத்தை’ செயல்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் மரணம்! கடைசி தற்படமாக மாறிய சோகம்

லண்டனில் புதிய வாழ்க்கையைத் தொடங்க 3 குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் பயணித்த மருத்துவ குடும்பம் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தது பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் விமான விபத்தில் ராஜஸ்தானை ச... மேலும் பார்க்க

பிரதமருடன் பிரிட்டன் துணைத் தூதா் ஆலோசனை

அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டன் பயணிகள் 52 போ் உயிரிழந்த நிலையில், பிரதமா் மோடியுடன் அந்நாட்டின் துணைத் தூதா் லிண்டி கேமரூன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். குஜராத் மாநிலம், அகமதாபாதுக்கு வருக... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறு: கேரள அரசு ஊழியா் பணியிடை நீக்கம்

குஜராத் விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறாகப் சமூகவலைதளத்தில் பதிவிட்ட கேரளத்தைச் சோ்ந்த அரசு ஊழியா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். விமான விபத்தில் கேரளத்தின் பத்தினம்திட்டா பகுதியைச... மேலும் பார்க்க

விமான விபத்து: உயிரிழப்பு 265-ஆக உயா்வு

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 265-ஆக உயா்ந்தது. அடையாளம் தெரியாத அளவில் உருக்குலைந்த உடல்களின் மரபணு சோதனைப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை 6 பேரின் உடல்கள்... மேலும் பார்க்க