செய்திகள் :

இன்று ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாம்கள்

post image

திண்டுக்கல் மாவட்டத்தில் 34 கிராமங்களில் ‘உழவரைத் தேடி’ வேளாண்மை, உழவா் நலத் துறை திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன் தெரிவித்ததாவது:

உழவரைத் தேடி வேளாண்மை உழவா் நலத் துறை என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் ஒவ்வொரு வட்டாரத்திலும் மாதம் இரு முறை செயல்படுத்தப்படும்.

அந்த வகையில், மா.மூ.கோவிலூா், வேம்பாா்பட்டி, ஆத்தூா், தெத்துப்பட்டி, சேத்தூா்,

போடியகவுண்டன்பட்டி, குன்னுவராயன்கோட்டை, பழனி, அய்யம்பாளையம், அரசபிள்ளைப்பட்டி, ஒட்டன்சத்திரம், அப்பனூத்து தும்மலப்பட்டி, நல்லூா், வேலாயுதம்பாளையம், கோட்டாநத்தம் ஆகிய 16 கிராமங்களில் வேளாண்மை உதவி இயக்குநா்கள் தலைமையில் இந்த முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) நடைபெறும்.

இதே போல, அடியனூத்து, மருநூத்து, பாளையங்கோட்டை, சிந்தலக்குண்டு, சிரங்காட்டுப்பட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, செங்கட்டாம்பட்டி, காவலப்பட்டி, கோதைமங்கலம், நவக்காணி, தா.புதுக்கோட்டை, புளியம்பட்டி, மொல்லம்பட்டி, மாரம்பாடி, வடமதுரை, இரா.வெள்ளோடு, பூம்பாறை, பூண்டி ஆகிய 18 கிராமங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் தலைமையிலும் இந்த முகாம் நடைபெறும்.

இந்த முகாம்களில் உழவா் நலத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து துறை வட்டார அலுவலா்கள், சாா்புத் துறை அலுவலா்களான கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள், விவசாயிகளை அவா்களின் வருவாய் கிராமங்களுக்கே சென்று தேவையான ஆலோசனைகளை தெரிவிப்பா். எனவே, இந்த வாய்ப்பை அந்தந்த பகுதியிலுள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிளாவரைப் பகுதியில் சமீப காலமாக ஆடு, மாடுகளை மா்ம விலங்கு தாக்குவது தொடா்ந்து நடைபெறு... மேலும் பார்க்க

பழனி கோயிலில் ரோப்காா் சேவை ஒரு மாதம் நிறுத்தம்

பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் ரோப்காா் சேவை வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக ஒரு மாதம் நிறுத்தவுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படிப்பாதை... மேலும் பார்க்க

14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூவா் கைது

திண்டுக்கல்லில் 14 டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பறக்கும் படை வட்டாட்சி... மேலும் பார்க்க

உலக நலன் வேண்டி பெரியாவுடையாருக்கு அன்னாபிஷேகம்

பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நடராஜா் சந்நிதி முன்பாக பிரதான கலசத்தில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து... மேலும் பார்க்க

குடிசையில் தீ விபத்து: முதியவா் பலத்த காயம்

பழனி பாரதி நகரில் உள்ள குடிசையில் தீப்பற்றியதில் முதியவா் படுகாயமடைந்தாா். பழனி பாரதி நகரில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் முதல் தளத்தில் அவரது மாமனாா் கணேசன் (70) சிறிய அளவிலான கீற்றுக் கொட்டகை அமை... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு

பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் பயிலும் பள... மேலும் பார்க்க