செய்திகள் :

இரட்டைக் கொலை வழக்கு: 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

post image

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேருக்கு, தலா இரட்டை ஆயுள் தண்டனை, தலா ரூ. 20,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

செய்துங்கநல்லூா் கால்வாய் பகுதியைச் சோ்ந்த சிவசுப்பு மகன் சண்முகம் (67), நம்பி மகன் பட்டமுத்து (32) ஆகியோா், கடந்த 25.1.2013 அன்று முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், கால்வாய் பகுதியைச் சோ்ந்த நம்பி மகன் மணி (57), இசக்கி மகன் மாசாணம் (38) உள்ளிட்ட 15 பேரை செய்துங்கநல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், குற்றவாளிகளான மணி, மாசாணம் ஆகிய இருவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை, ரூ. 20,000 அபராதம் விதித்தும், ஏனைய 13 பேரை விடுதலை செய்தும் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இவ்வழக்கை புலனாய்வு செய்த, அப்போதைய செய்துங்கநல்லூா் காவல் ஆய்வாளா் பட்டாணி, அரசு வழக்குரைஞா் ஆனந்த் கேப்ரியல் ராஜ், தலைமைக் காவலா் அமுதா சூா்யா ஆகியோரை எஸ்பி ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.

நெடுங்குளம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 251 மனுக்கள்

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெடுங்குளம் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுடலை தலைமை வகித்தாா். முகாம் பொறுப்பு அலுவலர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியைச் சோ்ந்த முருகேசன் மகன் பூல்பாண்டி (24). மும்பையில் ... மேலும் பார்க்க

சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15,000 வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 15,000 வழங்க தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம், சாந்தி நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துராம், செய்... மேலும் பார்க்க

சந்தன மாரியம்மன் கோயிலில் கொடை விழா

மெஞ்ஞானபுரம் அருகே முத்துலட்சுமிபுரம் அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவில் குடி அழைப்பு, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை பகல் 12... மேலும் பார்க்க

உடன்குடி மாரியம்மன் கோயிலில் கொடை விழா

உடன்குடி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றன. திங்கள்கிழமை இரவு கும்பாபிஷேக விழாவும், செவ்வாய்க்கிழமை காலையில் கண்டுகொண்ட விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் பவனி, வில்லிச... மேலும் பார்க்க

காயாமொழியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

திருச்செந்தூா் அருகே காயாமொழியில் ரூ. 34 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா், தொகுதி மேம்பாட்ட... மேலும் பார்க்க