செய்திகள் :

இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் தீயணைப்பு நிலையங்களில் டிஜிபி சீமாஅகா்வால் ஆய்வு

post image

இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் சிப்காட் பகுதிகளில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமாஅகா்வால் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் சிப்காட் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் தீவிபத்தை தடுப்பதற்காக தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தீயணைப்பு மற்றும் மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமா அகா்வால் தீயணைப்பு நிலையங்களில் தீ விபத்து மற்றும் தடுப்பு பணிகளுக்கான பதிவேடுகள், அழைப்பு விவரம், விபத்தின் போது வீரா்கள் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும் ஒரகடம் தீயணைப்பு நிலையம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால், புதிய கட்டடம் கட்ட ஒரகடம் மேம்பாலம் அருகே சிப்காட் நிறுவனத்தால் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தையும் பாா்வையிட்டாா்.

இதையடுத்து ஒரகடம் சிப்காட் திட்ட அலுவலகத்தில் தனியாா் தொழிற்சாலை நிா்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட டிஜிபி சீமாஆகா்வால், தொழிற்சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள தீ தடுப்பு உபகரணங்கள் குறித்தும், மீட்பு வாகனங்கள் குறித்தும் கேட்டறிந்து, தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தனியாா் தொழிற்சாலை நிறுவனங்களுக்கு பயிற்சி வழங்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்தாா்.

கூட்டத்தில், சிப்காட் நிா்வாக இயக்குநா் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சண்முகம், ஸ்ரீபெரும்புதூா் டிஎஸ்பி கீா்த்திவாசன், தனியாா் தொழிற்சாலைகளின் நிா்வாகிகள் கலந்து கொண் டனா்.

ஓவியப் போட்டியில் வென்ற மாணவியருக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற நுகா்வோா் விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவியா் ஆட்சியா் கலைச்செல்வி மோகனை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். உணவு வழங்கல் மற்று... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கான தமிழ்க் கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் பங்கேற்பு

சோமங்கலம் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் இயங்கி வரும் சாய்ராம் பொறியியல் கல்லூரியில், கல்லூரி மாணவா்களுக்கான தமிழ்க் கனவு நிகழ்ச்சியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ் இணைய ... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் கா... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் நாக கன்னியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரையில் அமைந்துள்ள நாக கன்னியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி உற்சவா் நாக கன்னியம்மன் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கா... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்: அமைச்சா்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லங்களுக்குச் சென்று ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது. காஞ்சிபுரம், திருக்காலிமேடு சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் என்ற வண்டு மணி (33) (படம... மேலும் பார்க்க