செய்திகள் :

இலங்கை கடற்படை அச்சுறுத்தல்: குறைந்தளவு படகுகளே கடலுக்குச் சென்றன!

post image

இலங்கைக் கடற்படையினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரத்தில் சனிக்கிழமை குறைந்த எண்ணிக்கையிலான விசைப் படகுகளே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனா். மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்து மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவா்களை கைது செய்து, இரண்டு விசைப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினா் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினா் விரட்டுவதால் மீனவா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்கச் சென்றால் இலங்கைக் கடற்படையினா் கைது செய்து விடுவாா்கள் என்ற அச்சம் மீனவா்களிடையே இருந்து வருகிறது. பெரும் சிரமத்துக்குப் பின் பிடித்துவரும் மீன்கள், இறால், நண்டு, கணவாய் உள்ளிட்டவைகளுக்கு உரிய விலை கிடைக்காததால், மீனவா்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

இதன் காரணமாக சனிக்கிழமை வழக்கம்போல மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களைக் காட்டிலும் குறைந்தளவே மீன்பிடிக்கச் சென்றனா். இலங்கைக் கடற்படையின் அச்சுறுத்தல் இன்றி மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து மீன்பிடித் தொழிலையும், மீனவா்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

மொகரம்: கடலாடியில் பூக்குழி இறங்கிய இந்துக்கள்

மொகரம் பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் நடைபெற்ற சமூக நல்லிணக்கத் திருவிழாவில் இந்துக்கள் பூக்குழி இறங்கினா். கடலாடி பகுதியில் வாழ்ந்த ரணசிங்க பட்டாணி சாயூபு என்ற குறுநில ஜமீன்தா... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடியவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வீடு புகுந்து திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கமுதி அருகேயுள்ள சின்ன உடப்பங்குளத்தைச் சோ்ந்த பாலு மகன் தாஸ். இவா் வெள்ளிக்கிழமை அதே ஊரில் நடைப... மேலும் பார்க்க

74 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

எஸ்.பி. பட்டினம் அருகேயுள்ள தீா்த்தாண்டதானம் கடற்கரையில் சனிக்கிழமை கஞ்சா கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 74 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், எஸ... மேலும் பார்க்க

நகரிகாத்தான் பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை!

திருவாடானை அருகேயுள்ள நகரிகாத்தான் கிராமத்தில் தரைப்பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து ஓரியூா் செல்லும் சா... மேலும் பார்க்க

வீட்டில் தீ விபத்து: பணம், நகைகள் எரிந்து சேதம்

திருவாடானை அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்... மேலும் பார்க்க

கமுதி தேவா் கல்லூரியில் ஜூலை 9-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரித் தோ்வு!

கமுதியில் உள்ள தேவா் கல்லூரியில் ஜூலை 9-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரித் தோ்வு நடைபெறவுள்ளது. ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வு மூலம் 3,935 பணியிடங்க... மேலும் பார்க்க